வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜூலை-ஆகஸ்டு 2017)

1. சத்தியவசனம் இதழ் கருத்துள்ள ஆழமான ஆன்மீகக் காரியங்களை விளக்கும் சத்தியமாக வெளிவருவது மிக நன்றாக உள்ளது. ஆழ்ந்த விளக்கங்களுடன் செய்திகளை வடிக்கும் ஆண்டவரின் பிள்ளைகளை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் எமது ஆன்மீக வாழ்க்கைக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. தியானங்களை எழுதும் கர்த்தருடைய பிள்ளைகளை கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம். வேதாகம அட்டவணைப்படி வேதாகமத்தை 2016-ம் ஆண்டிலும் வாசித்து முடித்தேன். ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் வாசிக்க ஆவியானவரின் கிருபை வழிநடத்துதலுக்காக நன்றி செலுத்துகிறேன்.

Mr.D.Stephen Natarajan, Cuddalore.


2. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் அனுதினமும் குடும்ப ஜெபத்தில் வாசித்து ஜெபக்குறிப்புக்காகவும் ஊழியங்களுக்காகவும் ஜெபித்து வருகிறோம். உங்களுடைய புத்தகத்தில் குறிப்பிட்ட வேத வசன அட்டவணையின்படி கடந்த ஆண்டில் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடிக்கவும் கர்த்தர் கிருபை செய்தார்.

Mrs.Sarojini Arthur, Valliyur.


3. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தை தவறாமல் படித்து வருகிறோம். மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது. இன்னும் விசுவாச பாதையில் நிலைநிற்கவும் அதிகமாக ஆண்டவரை கிட்டிச்சேரவும் உதவுகிறது. எங்களுக்காக ஜெபியுங்கள்.

Mrs.M.Samuel, Nellikuppam.


4. அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கை எனக்கு தவறாமல் வருகிறது. ஒவ்வொரு நாளும் தியானப்பகுதியை வாசிக்கிறேன். ஆன்மீக வாழ்க்கைக்கு ஏற்ற மன்னவாக இருக்கிறது. ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mr.Thangaraj, Avarikulam.


5. சத்தியவசனம் வானொலி நிகழ்ச்சிகளை திங்கள் செவ்வாய் ஆகிய நாட்களில் MW873 Khz-ல் தெளிவாகக் கேட்டு ஆண்டவரைத் துதிக்கிறேன்.

Mr.Milton, Tiruppathur.