ஜெபக்குறிப்பு: 2019 ஜுன் 30 ஞாயிறு

“இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகலநாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” (மத்.28:20) என்று வாக்குப்பண்ணின தேவன் தாமே இம்மாதம் முழுவதும் நமது எல்லாச் சூழ்நிலைகளிலும் நம்மோடிருந்து நம்மை தமது சமாதானத்தோடு காத்துக்கொண்டபடியால் ஸ்தோத்திரித்து அவருடைய பாதம் பணிந்து அவருக்கு நன்றிபலிகளை ஏறெடுப்போம்.


விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும் (எபி.11:6).