வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜூலை-ஆகஸ்ட் 2020)

[01]
அன்புள்ள சகோதரருக்கு அன்பின் ஸ்தோத்திரம், எங்கள் வாழ்வில் உங்கள் அனுதின தியானம், ஞாயிறு ஆராதனை, ரேடியோ நிகழ்ச்சி, திங்கள் குருத்தோலை பிரசங்கம், மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. சகோதரி சாந்தி பொன்னு எழுதும் ஒவ்வொரு செய்தியும், எங்களை ஆறுதல்படுத்துகிறது. ஆலயம் செல்லமுடியாத எங்களுக்கு மிகவும் ஆசீர்வாதம் உங்கள் ஊழியம்தான். கர்த்தரோடு ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிறோம்.

Sis.A.Leelabai, Madurai.


[02]
I appreciate very much your Ministry, you are doing the gospel work with dedication and devotion. I thank the Lord for your dedicated spiritual service which you are rendering to Christian brothers and sisters.

Mr.P.Vincent, Srivilliputhur


[03]
ஞாயிறு அன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன். Prof.Edison அவர்களின் செய்தி மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது. நான் ரோம கத்தோலிக்க பாரம்பரியத்தைச் சார்ந்தவன்.

Mr.Stephen, Coimbatore


[04]
14-06-2020 அன்று ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேராசிரியர் எடிசன் அவர்களின் வருகையைப் பற்றிய செய்திகள் ஆசீர்வாதமாக இருந்தது நன்றி.

சகோதரி ரெபேக்காள், சென்னை


[05]
மதிப்பிற்குரிய சத்தியவசன ஆசிரியர் ஐயா அவர்களுக்கு, தாங்கள் எங்கள் மீது அன்பு வைத்து தவறாமல் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்திய வசனம் மற்றும் காலண்டர் அனைத்துக்கும் மிகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன் மனதுக்கு தேனிலும் இனிமையாக உள்ளது, வேதவினாப்போட்டி சத்தியத்தை அறிந்துகொள்ள பயனுள்ளதாகவுள்ளது நானும் பதில் எழுதி வருகிறேன் நன்றி.

Mrs.S.சுந்தரி, மதுரை.


[06]
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர் அவர்களுக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கை என்னுடைய மாமா மூலம் எனக்கு கிடைத்தது. அதை படித்தபோது எனக்கு ஆசீர்வாதமாக இருந்தது. எனக்காகவும் எனது ஆவிக்குரிய ஜீவியத்திற்காகவும், எனது எதிர்காலத்திற்காகவும் எனது பாதுகாப்பிற்காகவும் ஜெபித்துக்கொள்ளவும், மிக்க நன்றி.

Sis.கி.எப்சிபா, மதுரை.


[07]
வாட்ஸ் ஆப்பில் நீங்க அனுப்புற தேவ சேதி ரொம்ப பிரயோஜனமாக இருக்குதுங்க. ரொம்ப நன்றிங்க. நல்லா புரிகிற மாதிரி இருக்குங்க. உணர்வடைய செய்யதுங்க வாழ்க்கையில கடவுளுக்கு பிரியமா வாழனும் ஆசையை உண்டாக்குதுங்க. ஆண்டவரோட அன்ப புரிய வைக்குதுங்க. வாழ்க்கையில மாற்றத்த வரவைக்குதுங்க. நிறைய நேரம் உங்க மெசேஜை கண்ணீரோட படிக்குறோம்ங்க, ரொம்ப நன்றிங்க.

(Bro.Francis Antony)