வாசகர்கள் பேசுகிறார்கள்

(மே-ஜுன் 2021)

[01]
தாங்கள் அன்புடன் அனுப்பித்தந்த 2021 ஆம் வருட காலண்டர் கிடைக்கப் பெற்றோம். 2021ஆம் ஆண்டிலும் அனைத்து ஊழியங்களும் சிறப்பாக தொடரவும் அதன் மூலம் அநேக ஆன்மாக்கள் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும் ஊக்கமாக ஜெபிக்கிறேன். விசேஷமாக அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான நூல்களில் வெளிவரும் தியானங்கள் ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற ஆலோசனைகளைத் தருவதாகவும், ஆவிக்குரிய வாழ்க்கையைப் பெலப்படுத்துவதாகவும், ஆறுதல் அளிப்பதாகவும் அறிவுரை வழங்குவதாகவும் உள்ளது. மனநிறைவு, மனஅமைதி, மன மகிழ்ச்சி, மன சமாதானத்தையும் அளிக்கிறது. தினமும் ஆண்டவர் நம்மோடு இடைபடுவதை உணரமுடிகிறது. எத்தனைமுறை வேண்டுமானலும் படித்து பயன்பெற முடிகிறது. அதற்காக உங்களுக்கும் ஆண்டவருக்கும் நன்றி கூறுகிறேன். நான் படித்தபின் மற்றவர்களும் படித்து பயன் பெற ஊழியர்களிடம் கொடுத்துவிடுவேன். இவற்றின் வாயிலாக விதைக்கப்படும் இறை வார்த்தைகள் அநேகருக்கு பயன் தந்துக்கொண்டே இருக்கிறது. எத்தனையோ பேர் ஆறுதலும் அறிவும் பெறுகின்றனர். தொடர்ந்து உங்கள் ஊழியங்கள் சிறப்பாக மற்றவர்களுக்கு பயன்தர ஜெபிக்கிறேன்.

Mrs.Victoria Vimaladevi, Seyyoor.


[02]
Dear Brother in Christ, Anuthinamum Christhuvudan (22.12.2020) Devotion was very super. When I read this devotion, my eyes are filled with tears. It encourage me so much and give me a strong Hope. I thank God for that excellent Devotion. Thank you.

Mr.J.Asir Thomas, Kallidaikurichi.


[03]
Praise the Lord Brother, May God bless your Ministry more and more for his Glory to get lot of souls in this year.

Mr.John Arputharaj, Coimbatore


[04]
சத்தியவசன பத்திரிக்கைகளினாலே நான் மிக்க பலன் அடைகிறேன். பத்திரிக்கைகள் வந்தவுடன் உடனுக்குடன் படிக்க இயலவில்லை என்றாலும் மெதுவாகவும் ஆர்வத்துடன் படிக்கிறேன். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mrs.Christina Vijaya, Trichy.


[05]
கர்த்தருக்குள் அன்பான சகோதரருக்கு, கர்த்தரின் இனியநாமத்தில் வணக்கம். சத்தியவசன ஊழியத்திற்காக தினமும் ஜெபிக்கிறோம். குறிப்பாக துதி ஜெபவிண்ணப்பம் குறிப்புகள் வைத்து உபவாச ஜெபங்களில் ஜெபிக்க பயனுள்ளதாக உள்ளது. பரிசுத்த வேதாகம கால அட்டவணை அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கையிலும் காலண்டரிலும் நீங்கள் அனுப்புவது கிரமமாக வேதம் வாசிக்க மிக பயனுள்ளதாக உள்ளது. 2020 டிசம்பர் 31 ஆம் தேதி சரியாக நானும் என் கணவரும் ஒரு முறை படித்து முடித்து விட்டோம். தொடர்ந்து தினமும் வாசிக்கிறோம். அனுதின தியானம், சஞ்சிகை ஆசீர்வாதமாக உள்ளது.

Mrs.Beulah James, Chennai.