சத்தியவசன இணைய தளத்திற்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல் கூறி உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுக்கு சேவை செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன ஊழியமானது வெகுஜன தொடர்பு ஊழியமாகும் தமிழில் இந்த வெப்சைட்டில் இடம் பெற்றுள்ள எமது ஊழிய ஸ்தாபனத்தைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என நம்புகிறோம். மேலும் இதில் இடம் பெற்றுள்ள ஆவிக்குரிய செய்திகள் மற்றும் தியானங்கள் நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலமடையவும் ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கவும் உதவியாயிருக்கும். இதன் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் உங்கள் மேலான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் ஜெபக்குறிப்புக்களையும் ஆவிக்குரிய தேவைகளையும் எங்களிடம் தெரிவிக்கலாம். உங்களுக்காக ஜெபிக்கவும் உங்களுக்கு ஆலோசனை அளிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். இந்த வெப்சைட்டிற்கு வருகைதரும் போது நீங்கள் எங்கள் நண்பர்களாகிறீர்கள். மேலும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடனான உறவிலே நீங்கள் மகிழ்ந்திருக்கவும் அதில் நிலைத்திருக்கவும் அதற்கு நாங்கள் உதவவும் விரும்புகிறோம்.

It is a pleasure to serve you. We trust that the information and available material in Tamil language will be blessing to you, your family and friends. Sathiya Vasanam Ministry is a Unit of The Good News Broadcasting Society. It is a media ministry and we seek to touch lives with the blessing of God’s Word. You will find interesting information that will enrich you spiritual walk with the Lord Jesus and you can begin a closer walk with the Lord through the study of His Word. We welcome you to respond with any need or prayer request you may have. We are available to help you as best as we can and pray for you and your needs. When you log on to our website, you become our friend and we want to do all we can to make your relationship with Jesus Christ enjoyable and fulfilling. Thank you for choosing to log on to www.sathiyavasanam.in

ஜெபக்குறிப்பு: ஜூலை 11 சனி

“என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால் அவரை ஸ்தோத்திரிக்கிறேன்” (1தீமோ.1:12) தேவன்தாமே ஊழியத்திற்கு ஏற்படுத்தின சத்தியவசன வானொலி செய்தியாளர்களை தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்திட ஜெபிப்போம்.

உமக்கு ஒப்பானவர் யார்?

தியானம்: ஜூலை 11 சனி; வாசிப்பு: யாத்திராகமம் 15:1-11

“…பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளரும், துதிகளில்
பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய
உமக்கு ஒப்பானவர் யார்?” (யாத்திராகமம் 15:11)

தேவன் நமது வாழ்வில் எத்தனையோ அதிசயங்களைச் செய்திருக்கிறார். நாம் எண்ணுவதற்கும் மேலாக அவரது வழிநடத்துதல்கள் நமது வாழ்வில் இருந்திருக்கிறது. ஆனால், நாம் அவற்றையெல்லாம் அவ்வப்போது இலகுவாக மறந்துவிடுவதுண்டு. ஆண்டவர் சமுகத்தில் நாம் எடுக்கும் தீர்மானங்கள், வருட ஆரம்பத்தில் அவரோடு நாம் செய்யும் உடன்படிக்கைகள் எல்லாமே காணமற் போய்விடுவதுண்டு. ஆராதனை வேளையில் வாய்களைத் திறந்து துதியுங்கள் என்றால், அப்போதுதான் நமது நாவுகளெல்லாம் கட்டப்படும்.

சிவந்த சமுத்திரத்தைக் கடந்து வெளியேறிய இஸ்ரவேலர் தேவனைத் துதித்துப் பாடியதையும், அவருக்கே எல்லா மகிமையைச் செலுத்தியதையும் நமது தியானப் பகுதி எடுத்துக்காட்டுகிறது. அவர்கள் எவ்வளவு மகிமையோடு தேவனைத் துதித்தார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. வெற்றிக் களிப்புடன் தேவனைத் துதித்து மகிமைப்படுத்தி ஆராதித்தார்கள். தேவர்களில் உமக்கொப்பான தேவன் இல்லையென்று மகிமைப்படுத்தினார்கள். அதிசயங்களைக் காணச்செய்த தேவன் தம்மோடு என்றுமேகூட இருக்கிறார் என்ற சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தார்கள்.

நாமும் தேவனை ஆராதிக்கும்போது அவரது மகத்துவத்தையும், அதிசயங்களையும், அவரது வழிநடத்துதலையும் எண்ணியவர்களாய் தேவனை மகிமைப்படுத்தவேண்டும். ‘ஈவையெல்லாம் எண்ணு சொல்லி ஒவ்வொன்றாய்; அப்போ தேவ ஈவு ஏராளம் என்பாய்’ என்று ஒரு பக்தர் எழுதிவைத்தார். நமது துதிகளும், ஆராதனையும் தானாய் நம் உள்ளத்திலிருந்து வரவேண்டும். அது மற்றவர்கள் சொல்லி வருவதல்ல. நாம் எவ்வளவாய்த் தேவனை அறிந்திருக்கிறோமோ, எவ்வளவாய் அவரை நம் வாழ்வில் ருசித்திருக்கிறோமோ, அவரது அதிசயமான வழிநடத்துதலை நம் வாழ்வில் கண்டிருக்கிறோமோ, அவ்வளவாய் நம் உள்ளத்திலும், வாயிலுமிருந்து துதி தானாய் எழும்பும்.

‘கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்’ என்று தாவீது பாடினார் (சங்.34:1). நம்மாலும் அப்படிச் சொல்லக்கூடுமோ! கர்த்தரை துதிக்கும் துதி எப்போதும் நம் நாவில் இருந்தால், நாவினால் நாம் செய்யும் எத்தனையோ பாவத்துக்குத் தப்பிக்கொள்ளலாம். தேவன் நமக்குச் செய்த நன்மைகளை, அவரது இரக்கம், கிருபைகளை நினைத்து வாழ்ந்தால் அவரைத் துதிக்கும் துதியையும் நம் நாவைவிட்டு அகற்றமாட்டோம். எல்லா சூழ்நிலைகளிலும் தேவனைத் துதிப்போமாக.

ஜெபம்: “பிதாவே, உமக்கு ஒப்பானவர் இல்லை. உமது வழிநடத்துதலை நினைந்து என்றும் உம்மைத் துதித்து வாழும் இதயத்தை தாரும். ஆமென்.”

சத்திய வசனம் (நவம்பர் – டிசம்பர் 2023)