வாசகர்கள் பேசுகிறார்கள்

(நவம்பர் – டிசம்பர் 2020)

[01]
அனுதினமும் கிறிஸ்துவுடன் வாசிக்கும்பொழுது ஒவ்வொரு வார்த்தைகளும் என் ஆத்துமாவைப் புதுப்பித்து ஒவ்வொரு நாளும் ஆண்டவருக்குள் வளரச் செய்கிறது. மனநிறைவும் கிடைக்கிறது. இந்த ஊழியத்தில் பங்கு பெற்றுள்ள சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கிறேன். ஆண்டவர்தாமே இந்த ஊழியத்தின் எல்லாத் தேவைகளையும் சந்தித்து தொடர்ந்து சிறப்பாக நடைபெற கிருபை செய்வாராக!

Mrs.Darling Gunaranjitham, Tuticorin.


[02]
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் சரியாக ஒவ்வொரு நாளும் வாசிக்கும்போது கர்த்தர் நடத்திகொண்டு போவதை உணரமுடிகிறது. தியான புத்தகம் சரியான நேரத்தில் கிடைப்பதற்கு உதவுங்கள். மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்போம்.

Mr.Mani, Dindigul


[03]
சத்தியவசன ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் வல்லமையான ஊழியத்திற்காக ஆண்டவரைத் துதிக்கிறோம். தங்கள் ஊழியம் மேலும் வளர்ச்சி அடையவும் அநேக மக்கள் இயேசுவின் அன்பையும் ஒளியையும் கண்டுகொள்ளவும் ஜெபிக்கிறோம்.

Mr.D.Thangaraj, Kottaram, K.K.dt.


[04]
அன்பான சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தில் 21.8.2020-நாளின் தியானம் (வெளி.3:1-6) சர்தை சபையைப்பற்றி ஆவியானவர் வெளிப்படுத்தின செய்தி என்னை உற்சாகப்படுத்துகிறதாகவும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது. ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.

Mr.Asir Thomas, Kallidaikurichi.


[05]
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் வாட்ஸ் அப் – ஒரு குருப்பில் உள்ளேன். அந்த குரூப்-பில் உங்களது தியான செய்திகளும் வரும். அதிலுள்ள வேதவாசிப்பு எல்லாவற்றையுமே தவறாமல் பின்பற்றி வருகிறேன். இன்றைக்கு உள்ள தியான செய்தி (செப்டம்பர் 19) கண்களோடு உடன்படிக்கை யோபுவின் புத்தகத்திலிருந்து கொடுக்கப்பட்ட செய்தி ரொம்பவே பயனுள்ளதாக இருந்தது. தியானத்தின் இறுதியில் இடம்பெற்றுள்ள ஜெபமும் எனக்கு அதிக பிரயோஜனமாக உள்ளது. என்னுடைய அன்றாட வேத பகுதிகளோடு நான் இவற்றையும் சேர்த்து படிப்பது வேதத்தை ஆராய்ந்து படிக்க ஏதுவாயிருக்கிறது. இவ்விதமாக எங்களை ஆன்மீக வழியில் நடத்துகிற உங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம் .

Sis.Banumathi, Panakudi.

வாசகர்கள் பேசுகிறார்கள்

(செப்டம்பர் – அக்டோபர் 2020)

[01]
உங்கள் ஊழியங்கள் அநேகருக்கு பிரயோஜனமாக இருப்பதை அன்பர்கள் கடிதம் மூலம் அறியமுடிகின்றது. தேவன்தாமே உங்கள் ஊழியத்தை இன்னும் அதிகமாக ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். தங்கள் ஊழியர்களின் அன்பை சென்ற வருடம் சென்னையில் நடந்த கூடுகைகளில் நேரில் அனுபவித்தவன் நான் 81 வயதிலும் தேவன் எனக்கு போதுமானவராகவே இருக்கிறார்.

Mr.Richard Sam Alex, Chennai.


[02]
Praise the Lord, Anudhinamum Christhuvudan Meditation words by Sis.Shanthi Ponnu is encouraging us through small examples to our mind. God bless you all.

Mrs.Kamala Robert, Coimbatore.


[03]
தாங்கள் மேற்கொண்டிருக்கும் உன்னதப் பணிகளான இலக்கியப்பணி, அனுதினமும் கிறிஸ்துவுடனான தியானப்பணி, வானொலி மற்றும் தொலைக்காட்சி பணிகள் மூலமாக விதைக்கப்படும், திருவசனங்கள் நிச்சயமாக அதனதின் பணிகளைச் செய்து மீட்பர் இயேசுவுக்குள் அனைவரையுங்கூட்டிச் சேர்க்கும் என்று விசுவாசிக்கிறேன். கொரானா காலத்திலும் ஜுன் மாத அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழை அனுப்பியதற்கு உங்களுக்கு நன்றி. இறைப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இறைவன் சுகம் பெலன் அளித்துக் காப்பாராக.

Mr.G.Dhanaraj, Coimbatore.


[04]
Praise the Lord, சத்தியவசன வானொலி பணி வழங்கும் திங்கள், செவ்வாய் நிகழ்ச்சிகளை தவறாமல் கேட்கிறேன், தற்போது எடிசன் அவர்கள் இயேசுவின் மலை பிரசங்கத்தை தொடர்ந்து பேசிவருகிறார். மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது, நன்றி. நிகழ்ச்சியை நடத்துபவரின் குரல் வலம் மிக அருமை, அவருக்கு என் வாழ்த்துக்களை சொல்லுங்கள் மேலும் சாம் கமலேசன், பிரகாஷ் ஏசுவடியான், தியோடர் வில்லியம்ஸ், டாக்டர் புஷ்பராஜ் பாடல்கள் அனைத்தும் அருமையாகவும் ஆசீர்வாதமாகவும் உள்ளது சத்தியவசன ஊழியங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்.

Mr.J.A.Judson, Salem.


[05]
Beloved brother in Christ, Greetings in Jesus NAME. Your Magazine Anuthinamum Christhuvudan is of very much useful to our Spiritual Life. Every day in the Morning, before We start our day’s Work, We read the Word for that day and We meditate on that. We as a family are remembering you all.Your loving family and also your wonderful ministry in our daily Prayers.

Mr.S.Mathews, Vellore.


[06]
தங்கள் வலைத்தளத்தில் உள்ள இன்றைய தியானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

Bro.Jebaraj, Aruppukottai

வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜூலை-ஆகஸ்ட் 2020)

[01]
அன்புள்ள சகோதரருக்கு அன்பின் ஸ்தோத்திரம், எங்கள் வாழ்வில் உங்கள் அனுதின தியானம், ஞாயிறு ஆராதனை, ரேடியோ நிகழ்ச்சி, திங்கள் குருத்தோலை பிரசங்கம், மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது. சகோதரி சாந்தி பொன்னு எழுதும் ஒவ்வொரு செய்தியும், எங்களை ஆறுதல்படுத்துகிறது. ஆலயம் செல்லமுடியாத எங்களுக்கு மிகவும் ஆசீர்வாதம் உங்கள் ஊழியம்தான். கர்த்தரோடு ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிறோம்.

Sis.A.Leelabai, Madurai.


[02]
I appreciate very much your Ministry, you are doing the gospel work with dedication and devotion. I thank the Lord for your dedicated spiritual service which you are rendering to Christian brothers and sisters.

Mr.P.Vincent, Srivilliputhur


[03]
ஞாயிறு அன்று தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்தேன். Prof.Edison அவர்களின் செய்தி மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது. நான் ரோம கத்தோலிக்க பாரம்பரியத்தைச் சார்ந்தவன்.

Mr.Stephen, Coimbatore


[04]
14-06-2020 அன்று ஒளிபரப்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேராசிரியர் எடிசன் அவர்களின் வருகையைப் பற்றிய செய்திகள் ஆசீர்வாதமாக இருந்தது நன்றி.

சகோதரி ரெபேக்காள், சென்னை


[05]
மதிப்பிற்குரிய சத்தியவசன ஆசிரியர் ஐயா அவர்களுக்கு, தாங்கள் எங்கள் மீது அன்பு வைத்து தவறாமல் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்திய வசனம் மற்றும் காலண்டர் அனைத்துக்கும் மிகவும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன் மனதுக்கு தேனிலும் இனிமையாக உள்ளது, வேதவினாப்போட்டி சத்தியத்தை அறிந்துகொள்ள பயனுள்ளதாகவுள்ளது நானும் பதில் எழுதி வருகிறேன் நன்றி.

Mrs.S.சுந்தரி, மதுரை.


[06]
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர் அவர்களுக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் பத்திரிக்கை என்னுடைய மாமா மூலம் எனக்கு கிடைத்தது. அதை படித்தபோது எனக்கு ஆசீர்வாதமாக இருந்தது. எனக்காகவும் எனது ஆவிக்குரிய ஜீவியத்திற்காகவும், எனது எதிர்காலத்திற்காகவும் எனது பாதுகாப்பிற்காகவும் ஜெபித்துக்கொள்ளவும், மிக்க நன்றி.

Sis.கி.எப்சிபா, மதுரை.


[07]
வாட்ஸ் ஆப்பில் நீங்க அனுப்புற தேவ சேதி ரொம்ப பிரயோஜனமாக இருக்குதுங்க. ரொம்ப நன்றிங்க. நல்லா புரிகிற மாதிரி இருக்குங்க. உணர்வடைய செய்யதுங்க வாழ்க்கையில கடவுளுக்கு பிரியமா வாழனும் ஆசையை உண்டாக்குதுங்க. ஆண்டவரோட அன்ப புரிய வைக்குதுங்க. வாழ்க்கையில மாற்றத்த வரவைக்குதுங்க. நிறைய நேரம் உங்க மெசேஜை கண்ணீரோட படிக்குறோம்ங்க, ரொம்ப நன்றிங்க.

(Bro.Francis Antony)

வாசகர்கள் பேசுகிறார்கள்

(மார்ச்-ஏப்ரல் 2020)

[01]
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு, தங்களின் சத்திய வசனப் புத்தகம் மிகுந்த ஆறுதலைத் தருகிறது, எனக்கு பத்திக்கை அனுப்புங்கள். அடுத்த மாத முதல் சந்தா அனுப்புகிறேன்.

Sis.Mary Jeba, Madurai.


[02]
Dear Brother in Christ, Thank you all for sending so systematically, the magazines and your faithful prayers to win us all for his kingdom. Dr.Pushparaj message on the sathiyavasanam TV recently about observing the holy communion was a real teaching. We can only thank God for this beautiful sathiyavasanam ministry .

Mrs.Usha Prasad, Bangalore.


[03]
சத்திய வசன வானொலி நிகழ்ச்சி கேட்டேன். தெளிவாக இருந்தது. டாக்டர் தியோடர் வில்லியம் அவர்களின் வேத ஆராய்ச்சி ஆசீர்வாதமாக இருந்தது நன்றி.

Mr.Chidambaram, Bangalore.


[04]
அன்பான சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் நவம்பர் 25ந்தேதி திங்கள் தியானப் பகுதி “பாடுகளும் பயன்களும்” என்ற தலைப்பில் வந்த செய்திகள் மிகவும் (அருமையாகவும்) நன்றாக இருந்தது.

Bro.Mathankumar, Kallidaikurichi.


[05]
இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். தேவனுடைய பெரிதான கிருபையால் கடந்த நவம்பர் 12ம் தேதி என்னுடைய 80வயது கடந்து 81ம் ஆண்டுக்குள் நடத்துகின்ற என் தேவனுக்கு நன்றி செலுத்துகின்றேன். நம்முடைய குடும்ப கூடுகையில் கலந்துகொள்ள தேவன் கிருபை செய்தார். நிகழ்ச்சிகள் யாவும் நன்றாக இருந்தது. ஆத்துமாவுக்கும் சரீரத்திற்கும் நல்ல உணவும் உற்சாகமும் கொடுத்தது. உங்கள் ஊழியரின் கனிவான கவனிப்பிற்கும் மிக்க நன்றி.

Mr.Richard Sam Alex, Chennai.


[06]
எனக்கு இப்போது வயது 82. உடல் பலவீனத்தாலும் கண்பார்வை குறைவினாலும் வெளியீடுகளை சரியாக வாசிக்க முடியவில்லை. என் ஆவிக்குரிய வாழ்வில் எத்தனையோ ஆண்டுகள் அடைந்த ஆசீர்வாதங்களை இப்போது பெற முடியவில்லையே என்று வேதனை அடைகிறேன். என்னால் முடிந்தவரை வாசித்துவிட்டு எங்கள் சபையில் உள்ள எனது மாணவியிடம் கொடுத்து விடுகிறேன். அவர்கள் மூலம் அநேகர் ஆசீர்வாதம் பெறுகிறார்கள் என்று நம்பி சந்தோஷம் அடைகிறேன்.

Mrs.Sheela Samuel, Chennai.


[07]
அன்பான சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் ஜுன் மாத தியான பகுதியில் “பேச்சைக் காத்துக்கொள்” என்ற தலைப்பில் நம்முடைய ஜெபங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டிருந்தது. கவர்ச்சியான நீண்ட ஜெபங்கள் அல்ல, சிறிதானாலும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஏறெடுக்கும் ஒரு சிறு ஜெபத்தில் தேவன் பிரியப்படுகிறார், என்று கூறப்பட்டிருந்தது. நன்றி.

Mrs.Gnanamani Hepzibah, Vellenlanvilai.

வாசகர்கள் பேசுகிறார்கள்

(ஜனவரி-பிப்ரவரி 2020)

[01]
திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் 7 மணிக்கு ஒலிபரப்பாகும், சத்திய வசன வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். டாக்டர் சாம் கமலேசன் பேசினார். தற்போது Prof.Edison பேசிக்கொண்டிருக்கிறார் நிகழ்ச்சி நடத்துபவர் அருமை, பாடல்களும் அருமை, சத்தியவசன நிகழ்ச்சிகள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிக்கிறேன்.

Mr.J.A.Judson, Salem.


[02]
Praise the Lord, I am mind depression due to family circumstances. But Today (10.8.19) meditation words written by Bro. Vashini Earnest encoura ged me. The Lord has strengthen me, thro’ the words. Thanks be to the Lord.

Sis.Kamala Robert, Coimbatore


[03]
அனுதினமும் கிறிஸ்துவுடன் இருமாத இதழை, படித்து பயனடைந்து வருகிறேன். ஊழியம் மேன்மேலும் சிறப்புறவும், பன்மடங்கு ஆசீர்வதிக்கப்படுவதற்கும் இறைவனை வேண்டுகிறேன்.

சகோ.தங்கராஜ், கொட்டாரம்.


[04]
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரருக்கு தங்களுடைய அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை வாசித்தும் வாட்ஸ்அப் மூலம் அனைத்து ஜெபக் குறிப்புகளையும் வாசித்து வருகிறேன். என்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாயிருக்கிறது. எனது பேரப்பிள்ளைகளுக்காக ஜெபித்து வருகிறீர்கள் தங்களுக்காகவும் ஊழியத்துக்காகவும் அன்றன்று செய்திகளை தயாரித்துக் கொடுக்கும் சகோதர சகோதரிகளுக்காகவும் தினந்தோறும் ஜெபித்துவருகிறேன்.

சகோ.ஞானக்கண் செல்வராஜ், மதுரை


[05]
இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்அனுதினமும் கிறிஸ்துவுடன் எங்கள் அனைவருக்கும் ஆவிக்குரிய பெலனையும், விசுவாசத்தில் வளர்ச்சியையும் கொடுக்கிறது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

Mr.K.Immanuel Gideon Inbadas, Vellore


[06]
Praise the Lord, I refer your Programme in Nambikkai TV on 22nd September. I have heard your programme in Feba, then now in Nambikkai TV long break. The Message about inferiority complex and God’s Chossing was good, A blessed Message. Please pray for me, and my well being Thanks.

Mr.Mathew


[07]
உங்களுடைய TV நிகழ்ச்சியை பார்த்தேன் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்தேன். உங்களுடைய செய்தி (கர்த்தர் கொடுத்த வார்த்தை) என்னைத் தொட்டது, தேற்றியது. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சகோதரி மெர்லின்தாஸ், நாகர்கோவில்


[08]
அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற இதழை நாங்கள் தொடர்ந்து வாசித்து வருகிறோம். அதிலுள்ள இறை வார்த்தைகளும், விளக்கங்களும், எங்கள் மனதிற்கு மிகவும் ஆறுதலாக உள்ளது. தங்களோடு இணைந்து பணியாற்றும் அத்தனை ஊழியர்களுக்காகவும், பணிகள் மேலும் சிறப்புடன் நடைபெறவும் எங்களது அன்றாட ஜெபத்தில் வேண்டி வருகிறோம்.

Mrs.Janet George, Madurai.

வாசகர்கள் பேசுகிறார்கள்

(நவம்பர்-டிசம்பர் 2019)

[01]
I am very happy to tell you that I follow this Time table ever since introduced to the readers. I follow this Time table sincerely and finish reading the Bible in one year. This helps me to read the Bible Systematically and continuously from 1st January to the 31st December. Sometimes if I have to read 3 or 4 chapters a day. I never get bored. It also gives me the satisfaction of reading and completing the Bible in a year. Thank you very much for helping me read the Bible not only just reading but I study every verse with concentration and understanding. I assure you of my continued prayers for the Sathiavasanam Ministry.

Mrs.Nalini stephenson, Vellore.


[02]
அன்பு சகோதரருக்கு, நீங்கள் அனுப்பும் தின தியான புத்தகங்களும் எனக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது. தொலைகாட்சி நிகழ்ச்சிகளும் அதிக பயனுள்ளதாக இருக்கிறது. ஊழியத்தில் பங்கேற்கும் ஒவ்வொருவரையும் குடும்பங்களையும் தேவன்தாமே அபரிமிதமாக ஆசீர்வதிப்பாராக!

Mrs.Padmini Victor, Madurai.


[03]
அன்பான சகோதரருக்கு, தங்களது வாட்ஸ் அப் மூலம் தினமும் செய்திகள் பெற்று பலன் அடைந்துவருகிறேன். ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன். நன்றி.

Mr.Alphonse Jesu Antony, Chennai.


[04]
தாங்கள் ஒலிபரப்பிவரும் வானொலி நிகழ்ச்சிகளை 1965 முதல் கேட்டு வருகிறேன். அதில் வரும் பாடல்கள் மிக மிக இனிமையாக இருக்கிறது. ஊழியங்களுக்காக மறவாமல் ஜெபித்து வருகிறேன்.

Mr.D.Francis, Elathagiri.


[05]
தாங்கள் அனுப்பும் அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகத்தை தவறாமல் படித்து பயனடைந்து வருகிறேன். உங்கள் ஊழியம் மேன்மேலும் சிறப்புறவும் பன்மடங்கு ஆசீர்வதிக்கப்படுவதற்கும் ஜெபிக்கிறோம்.

Mr.D.Thangaraj, Kottaram.