வாசகர்கள் பேசுகிறார்கள்
(நவம்பர் – டிசம்பர் 2020)
[01]
அனுதினமும் கிறிஸ்துவுடன் வாசிக்கும்பொழுது ஒவ்வொரு வார்த்தைகளும் என் ஆத்துமாவைப் புதுப்பித்து ஒவ்வொரு நாளும் ஆண்டவருக்குள் வளரச் செய்கிறது. மனநிறைவும் கிடைக்கிறது. இந்த ஊழியத்தில் பங்கு பெற்றுள்ள சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கிறேன். ஆண்டவர்தாமே இந்த ஊழியத்தின் எல்லாத் தேவைகளையும் சந்தித்து தொடர்ந்து சிறப்பாக நடைபெற கிருபை செய்வாராக!
Mrs.Darling Gunaranjitham, Tuticorin.
[02]
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் சரியாக ஒவ்வொரு நாளும் வாசிக்கும்போது கர்த்தர் நடத்திகொண்டு போவதை உணரமுடிகிறது. தியான புத்தகம் சரியான நேரத்தில் கிடைப்பதற்கு உதவுங்கள். மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்போம்.
Mr.Mani, Dindigul
[03]
சத்தியவசன ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் வல்லமையான ஊழியத்திற்காக ஆண்டவரைத் துதிக்கிறோம். தங்கள் ஊழியம் மேலும் வளர்ச்சி அடையவும் அநேக மக்கள் இயேசுவின் அன்பையும் ஒளியையும் கண்டுகொள்ளவும் ஜெபிக்கிறோம்.
Mr.D.Thangaraj, Kottaram, K.K.dt.
[04]
அன்பான சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தில் 21.8.2020-நாளின் தியானம் (வெளி.3:1-6) சர்தை சபையைப்பற்றி ஆவியானவர் வெளிப்படுத்தின செய்தி என்னை உற்சாகப்படுத்துகிறதாகவும் சவால் நிறைந்ததாகவும் இருந்தது. ஊழியங்களுக்காக ஜெபிக்கிறேன்.
Mr.Asir Thomas, Kallidaikurichi.
[05]
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் வாட்ஸ் அப் – ஒரு குருப்பில் உள்ளேன். அந்த குரூப்-பில் உங்களது தியான செய்திகளும் வரும். அதிலுள்ள வேதவாசிப்பு எல்லாவற்றையுமே தவறாமல் பின்பற்றி வருகிறேன். இன்றைக்கு உள்ள தியான செய்தி (செப்டம்பர் 19) கண்களோடு உடன்படிக்கை யோபுவின் புத்தகத்திலிருந்து கொடுக்கப்பட்ட செய்தி ரொம்பவே பயனுள்ளதாக இருந்தது. தியானத்தின் இறுதியில் இடம்பெற்றுள்ள ஜெபமும் எனக்கு அதிக பிரயோஜனமாக உள்ளது. என்னுடைய அன்றாட வேத பகுதிகளோடு நான் இவற்றையும் சேர்த்து படிப்பது வேதத்தை ஆராய்ந்து படிக்க ஏதுவாயிருக்கிறது. இவ்விதமாக எங்களை ஆன்மீக வழியில் நடத்துகிற உங்கள் ஊழியங்களுக்காக ஜெபிக்கிறோம் .
Sis.Banumathi, Panakudi.