ஆசிரியரிடமிருந்து… (மே – ஜுன் 2025)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
நமக்காக மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்து இன்றைக்கும் ஜீவிக்கின்ற அன்பின் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்விதழை உங்களுக்கு அனுப்பி வைப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இத்தியானங்கள் அனைத்தும் உங்களுக்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.
இன்றைய நாட்களில் தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களும் தேவ பயமற்ற செயல்களும் கர்த்தருக்கு அவகீர்த்தியைக் கொண்டுவருகிற காரியங்களும் கிறிஸ்தவ சமுதாயத்தில் நடைபெற்று வருகிறதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனபடியால் நாம் விழிப்புள்ளவர்களாக இருந்து எச்சரிக்கையோடு தேவனிடத்தில் மன்றாடுவோம். பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும் (2 பேதுரு 1:19).
சத்தியவசன ஊழியத்தின் வாயிலாக தேவன் செய்துவரும் மகத்துவமான காரியங்களுக்காக தேவனைத் துதிக்கிறோம். இவ்வூழியத்தின் வாயிலாக தாங்கள் பெற்று வரும் ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்பாய் கேட்கிறோம். தொடர்ந்து சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று ஆசீர்வாதமடையுங்கள். இந்நிகழ்ச்சிகள் வாயிலாக அநேகர் மனந்திரும்பவும் சத்தியத்தை அறிந்துகொள்ளவும் வேண்டுதல் செய்யுங்கள்.
வேதாகம அடிப்படைகள் (Bible Basics) என்ற தலைப்பில் Dr. உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த ஆராய்ச்சி செய்திகள் தொடராக பிரசுரித்து வருகிறோம். அதை வாசித்து ஆசீர்வாதமடையுங்கள். மே மாதத்தில் Dr. உட்ரோ குரோல் அவர்கள் யாத்திராகமம் புத்தகத்திலிருந்து எழுதிய தியானத்தின் மொழியாக்கத்தையும், ஜுன் மாதத்தில் சகோதரி ஜெபி பிடில் அவர்கள் பலவிதமான தலைப்புகளில் எழுதியுள்ள தியானங்களையும் பிரசுரித்துள்ளோம். வாசித்து ஆசீர்வாதமடையுங்கள்.
கே.ப.ஆபிரகாம்