4. வேதாகமம் நித்தியமானது. பரிபூரணமானது!
வேதாகமத்தின் தனிச்சிறப்பு (மே – ஜுன் 2025)
Dr.உட்ரோ குரோல்
வேதாகமத்தின் கடைசிப்பகுதி 19 நூற் றாண்டுகளுக்கு முன் எழுதி முடிக்கப்பட்டது. அதிலிருந்து இதுவரை நாம் அநேகக் காரியங்களைப் படித்து அறிந்துள்ளோம்.
1950 முதல் சோவியட் யூனியனும், அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும் நடைபெற்றுவரும் விண்வெளி ஆராய்ச்சிகள், மனிதன் சந்திரனில் காலடி வைத்து, நடந்து சந்திரனில் உள்ள மண்கட்டிகளை எடுத்து வந்தது, எத்தனையோ செயற்கைக் கோள்களை அனுப்பியது, விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளது, சுனிதா வில்லியம்ஸ் என்னும் விண்வெளி வீராங்கனை ஆறுமாத காலம் விண்வெளியில் பறந்து ஆராய்ச்சிகள் செய்து, சாதனைகள் படைத்து வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியது இவற்றையெல்லாம் அறிந்துகொண்டிருக்கிறோம்.
பரவக்கூடிய கொடிய நோய்களைப் பற்றி எவ்வளவு காரியங்கள் அறிந்திருக்கிறோம்? (HIV, AIDS, புற்றுநோய்).
விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் கம்யூட்டர் வகைகள், செல்போன்கள் இவை புரியும் விந்தைகளை என்னவென்பது? சமீபகாலத்தில் இவ்வளவு கண்டுபிடிப்புகளும், சாதனைகளும் நிகழ்ந்திருக்கும்போது, நாம் எப்படி வேதாகமத்தைப் பூரணமானது என்று கூற முடியுமென்று தோன்றுகிறதல்லவா!
வேதாகமம் பூரணமானது என்று நான் கூறுவதன் உட்பொருள், ஆவிக்குரிய நிலையில் நாம் அறியவேண்டிய அனைத்தும் அதில் அடங்கியிருக்கிறது என்பதே. வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்தை யோவான் எழுதி முடித்தபின் ஆவிக்குரிய எந்தப் புதிய சத்தியமும் இன்றுவரை வெளிப்படுத்தப்படவில்லை!
தேவனைப்பற்றியும், அவரது நோக்கங்கள், திட்டங்கள் அனைத்தையும் வேதாகமம் வெளிப்படுத்துகிறது. தேவனுடைய வாக்குத்தத்தங்களைப் புரிந்துகொள்ள உங்களுக்கு இவ்வளவும் போதுமானது. இவையனைத்தையும் நீங்கள் வேதாகமத்தில் பெற்றிருக்கிறீர்கள்.
இன்று உலகில் ஏன் இவ்வளவு மரணங்கள், அழிவுகள், பிரச்சனைகள், வேதனைகள், துன்பங்கள் இருக்கின்றன? என்று அறியவேண்டுமானால் உங்களுக்குத் தேவை இந்த வேதாகமமே! அது மனிதனுடைய பாவம், அந்தப்பாவத்தால் ஏற்படும் விளைவுகள் இவற்றை நமக்கு வேதாகமம் விவரித்துக்காட்டும்.
தேவனுடைய அன்பு, இரக்கம், கிருபை இவற்றைக்குறித்து அறியவேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து உங்கள் பாவங்களைப் போக்க, உங்களுக்குப் பதிலாக மரணதண்ட னையைத் தம்மீது ஏற்றுச் சிலுவையில் மரிக்க அவர் செய்த தியாகத்தைப்பற்றி அறியவேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள்.
கல்வாரிச்சிலுவையில் இயேசு மூன்றாணிகளில் தொங்கி, இரத்தம் சிந்தி உங்களுக்காக உயிர்விட்டது, அடக்கம் பண்ணப்பட்டது, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தது, இவற்றைப்பற்றி அறியவேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள்.
இயேசு உயிர்த்தெழுந்த பின்னரும் உலகில் வாழ்ந்து மக்களுக்குக் காட்சியளித்து, தமது சீஷர்களுக்குக் கடைசிக் கட்டளை கொடுத்துப் பரமேறிச் சென்றதை அறிய வேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள்.
பரிசுத்தவான்களாய் மரிப்பீர்களானால் நீங்களும் உயிர்த்தெழுவீர்கள். கிறிஸ்துவின் வருகையின்போது பரிசுத்தவான்களாய் வாழ்வீர்களானால் உங்கள் சரீரம் மறுரூபமாக்கப்பட்டு நீங்களும் நடுவானத்தில் இயேசுவோடு இருக்கும்படி எடுத்துக்கொள்ளப்படுவீர்கள் என்ற சத்தியத்தை அறியவேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள்.
கிறிஸ்துவின் வருகையின்போது நீங்களும் சந்தோஷமாக கிறிஸ்துவுடன் எழுப்பப்பட வேண்டுமானால் நீங்கள் எப்படி வாழவேண்டும்? என்று அறியவேண்டுமானால் வேதாகமத்தை வாசியுங்கள்.
ஒரு வேதாகம அகராதி உங்களுக்குச் சொற்களின் விளக்கத்தைத் தரும். நீங்கள் ஒரு நாவல் என்னும் தொடர் கதையை வாசிப்பீர்களானால் அது உங்களுக்குப் பொழுதுபோக்காக இருக்கும். ஆனால், கர்த்தருடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமத்தை வாசித்தால்தான் உங்கள் வாழ்க்கை மாறுதல் அடையும். ஆவிக்குரிய வாழ்க்கையையும், நித்தியஜீவனையும் நீங்கள் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான அனைத்தும் இந்த வேதாகமத்தில் உண்டு.
இந்த மாம்ச உலகில் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்வது என்பது சுலபமான காரியமல்ல. பரலோகத்தில் நித்திய வாழ்வு எப்படி இருக்கும் என்பதை உல கில் வாழ்ந்து காட்டவேண்டும்.
இந்த உலகில் நீங்கள் பாவத்துக்கு மரித்தவர்கள் என்றும், உங்களுக்கு ஒரு இரட்சகர் தேவை என்றும் இந்த உலகத் தின் ஒரே இரட்சகர் இயேசுகிறிஸ்துவே என்றும் நீங்கள் அறியவேண்டும். தேவன் உங்களை நேசிக்கிறார் என்று நீங்கள் அறியவேண்டும். தேவன் உங்க ளுக்காக மரிக்கத் தமது குமாரனை அனுப்பித்தந்தார் என்பதையும் நீங்கள் அறியவேண்டும். இதை வேதாகமம் தான் உங்களுக்கு அறிவிக்கிறது. நீங்கள் இயேசுகிறிஸ்துவை தேவகுமாரன் என் றும், உலகஇரட்சகர் என்றும், உங்கள் இரட்சகர் என்றும் அறியவேண்டும். விசு வாசிக்கவேண்டும். அப்படி இயேசுவை விசுவாசித்தால் நீங்கள் இரட்சிக்கப்படு வீர்கள் என்று அறியவேண்டும். இதை யும் உங்கள் வேதாகமம்தான் உங்களுக் குச் சொல்லித்தருகிறது.
வேதாகமம் ஒரு தனிச்சிறப்புப் பெற்ற ஒரு புத்தகமா? இது எல்லாப் புத்தகங் களையும் விடவும் சிறந்ததா? இது மற்ற எல்லாப் புத்தகங்களையும்விட வித்தியா சமானதா? ஆம்! அப்படியேதான்!
வேதாகமம் தேவனுடைய புத்தகம்
பரிசுத்த வேதாகமம் தேவனுடைய உள்ளத்தை மனிதனுக்கு வெளிப்படுத் தும் புத்தகமாகும்.
பரிசுத்தவேதாகமம் மட்டுமே தேவனு டைய ஆவியினால் அருளப்பட்டது. அது நேரடியாக தேவனுடைய வாயிலிருந்து புறப்பட்டது.
வேதாகமம்மட்டுமே தவறு இல்லாத புத்தகமாகும். முற்றிலும் தவறோ, பிழையோ இல்லாதது. வேதாகமத்தில் எந்தவொரு தவறும், பிழையும் இருக்க முடியாது. இதில் எந்தத் தவறும் இடம்பெற முடியாது.
வேதாகமம் மட்டுமே நித்தியமான புத்தகம்! ஏனெனில் வேதாகமத்தை எழுதின தேவன் மட்டுமே நித்தியமானவர்.
வேதாகமம் மட்டுமே பூரணமான புத்தகம்! பரலோகத்துக்குச் செல்லும் வழி என்னவென்பதை நமக்குக் காட்டுவது இந்த வேதாகமம் மட்டுமே!
எனவே வேதாகமத்தை வாசித்துப் பயன்பெறுங்கள். நீங்கள் வேதாகமத்தைப் போல வேறொரு புத்தகத்தைக் காணவே முடியாது.
(தொடரும்)
மொழியாக்கம்: ஜி.வில்சன்