சத்தியவசன இணைய தளத்திற்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல் கூறி உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுக்கு சேவை செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன ஊழியமானது வெகுஜன தொடர்பு ஊழியமாகும் தமிழில் இந்த வெப்சைட்டில் இடம் பெற்றுள்ள எமது ஊழிய ஸ்தாபனத்தைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என நம்புகிறோம். மேலும் இதில் இடம் பெற்றுள்ள ஆவிக்குரிய செய்திகள் மற்றும் தியானங்கள் நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலமடையவும் ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கவும் உதவியாயிருக்கும். இதன் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் உங்கள் மேலான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் ஜெபக்குறிப்புக்களையும் ஆவிக்குரிய தேவைகளையும் எங்களிடம் தெரிவிக்கலாம். உங்களுக்காக ஜெபிக்கவும் உங்களுக்கு ஆலோசனை அளிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். இந்த வெப்சைட்டிற்கு வருகைதரும் போது நீங்கள் எங்கள் நண்பர்களாகிறீர்கள். மேலும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடனான உறவிலே நீங்கள் மகிழ்ந்திருக்கவும் அதில் நிலைத்திருக்கவும் அதற்கு நாங்கள் உதவவும் விரும்புகிறோம்.

It is a pleasure to serve you. We trust that the information and available material in Tamil language will be blessing to you, your family and friends. Sathiya Vasanam Ministry is a Unit of The Good News Broadcasting Society. It is a media ministry and we seek to touch lives with the blessing of God’s Word. You will find interesting information that will enrich you spiritual walk with the Lord Jesus and you can begin a closer walk with the Lord through the study of His Word. We welcome you to respond with any need or prayer request you may have. We are available to help you as best as we can and pray for you and your needs. When you log on to our website, you become our friend and we want to do all we can to make your relationship with Jesus Christ enjoyable and fulfilling. Thank you for choosing to log on to www.sathiyavasanam.in

ஜெபக்குறிப்பு: மே 14 சனி

“.. நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள்; உத்தமனுக்குக் கர்த்தர் துணை” (2நாளா.19:11) என்ற வாக்குப்படி தொழில் செய்துவரும் 6 நபர்களுக்கு கர்த்தர் துணையாக நின்று அதிலே நல்ல அபிவிருத்தியையும் நன்மைகளையும் கட்டளையிட பாரத்துடன் ஜெபிப்போம்.

பிள்ளைகள் தேவனுடைய ஆசீர்வாதம்

தியானம்: மே 14 சனி; வேத வாசிப்பு: சங்கீதம் 128:1-6

‘இதோ பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்’ (சங்.127:4).

அநேக வருடங்களாக பிள்ளைகள் இல்லாத ஒரு தம்பதியினர், ஒரு பிள்ளையை எடுத்து வளர்ப்பதற்குத் தீர்மானம் பண்ணி, குழந்தை ஒன்றைத் தேட ஆரம்பித்தனர். மனதுக்குப் பிடித்த மாதிரி ஒரு குழந்தை அமையாததால், பின்னர் பார்ப்போம் என்று சற்றுக் காலதாமதம் செய்தனர். அச்சமயத்தில் அந்த மனைவி தன் மனதை மாற்றிக்கொண்டு, குழந்தையை நான் தத்தெடுக்கவில்லை. தேவனுக்குச் சித்தமானால் நமக்கு ஒரு குழந்தையைத் தரட்டும்’ என்று அமர்ந்திருந்தாள். சிறிது காலங்களில் அவள் கர்ப்பவதியானாள். திருமணமாகி கிட்டத்தட்ட 16 வருடங்களின் பின்னர், தனது நாற்பதாவது வயதில் ஒரு குழந்தைக்கு அவள் தாயானாள். இது அற்புதமல்லவா? பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம்.

இன்றைய தியானப்பகுதியானது, கர்த்தருக்குப் பயந்து அவரது வழிகளில் நடக்கிறவனுக்குக் கிடைக்கும் ஆசிகளைக் குறித்துப் பேசுகிறது. அவற்றில், ‘உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போலிருப்பார்கள்’. இதிலிருந்து பிள்ளைகள் கர்த்தரால் வரும் ஆசியே என்பது திட்டவட்டமாகப் புலனாகிறது. இந்த நவீன உலகில் மருத்துவத்துறை எவ்வளவோ முன்னேறியிருக்கும் காலகட்டத்தில், பிள்ளைகளைக் கர்ப்பத்தில் உருவாக்குவதற்கு எத்தனையோ வழிமுறைகள் கண்டு பிடிக்கப்பட்டாலும், அவைகள் நூற்றுக்கு நூறுவீதம் பலனளிப்பது கிடையாது. இதற்குக் காரணம் என்னவாக இருக்கக்கூடும். கடவுளின் செயலின்றி மனிதனால் எதையும் செய்திட இயலாது என்பதை நாம் உணர்ந்திட வேண்டும். இன்று ஏதாவது வியாதி போன்ற கோளாறு எனில் நாம் உடனே மருத்துவரை நாடி ஓடுகிறோம். ஆனால், அன்று ரெபேக்காள் தன் வயிற்றில் பிள்ளைகள் முட்டிமோதியதை உணர்ந்ததும், இது என்ன என்று கேட்பதற்காக மருத்துவரிடமோ தன் கணவனிடமோ ஓடாமல், தேவனிடமே ஓடினாள் என்று வாசிக்கிறோம் (ஆதி.25:22).

நமது பிள்ளைகள் தேவன் நமக்குத் தந்த ஆசீவாதத்தின் ஊற்றுக்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளும்போதுதான், அவர்களைத் தேவனுக்குரியவர்களாக வளர்க்க வேண்டும் என்னும் பொறுப்பு நமக்குண்டு என்பதை நம்மால் உணர முடியும். நமது பொருட்களை நாம் இஷ்டத்துக்குக் கையாண்டாலும், பிறரின் பொருட்களை நாம் கவனமாகக் கையாளுவதுண்டு. ஏனெனில், அதை உரியவர்களிடம் திருப்பிக் கையளிக்கப்பட வேண்டும். இந்த உணர்வு இல்லையேல், அதைப் போட்டு உடைத்துவிட்டு உரியவர் முன்பாகத் தலைகுனிய வேண்டியதுதான். அதுபோலவே, நமது பிள்ளைகளும் தேவன் நமக்குத்தந்த ஆசியே. அவர்கள் தேவனுக்கு உரியவர்கள். அவர்களை தேவனுக்குரியவர்களாய் வளர்த்து, அவரிடம் கையளிப்பது பெற்றோராகிய நமது பொறுப்பாகும்.

‘அவன் தன் கண்களை ஏறெடுத்து ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு. உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான்’ (ஆதி.33:5).

சிந்தனைக்கு: பிள்ளைகளை நமக்கு அருளியவர் யார் என்பதைச் சிந்தித்திருக்கிறோமா? அவர்கள் தேவனுக்கு உரியவர்கள். எனவே அவருக்காய் வளர்ப்போம்.

சத்திய வசனம் (நவம்பர் – டிசம்பர் 2023)