ஜெபக்குறிப்பு: 2023 ஜூலை 30 ஞாயிறு

… அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும் (யாத்.29:43) இன்றைய ஆராதனைகள் நடைபெறும் எல்லா சபைகளிலும் விசுவாசிகள் பயபக்தியோடு கர்த்தரைத் தொழுதுகொண்டு ஆராதிப்பதற்கும், கொடுக்கப்படும் செய்திகளாலே தேவ எச்சரிப்பைப் பெற்றுக்கொண்டு கர்த்தரிடம் முழுமனதோடு மனந்திரும்புவதற்கும், ஒவ்வொருவரோடும் கர்த்தர் பேசவும் வேண்டுதல் செய்வோம்.