வாசகர்கள் பேசுகிறார்கள் (மார்ச் – ஏப்ரல் 2026)

1

I am one of the beneficiaries among thousands being blessed by reading the daily devotion book – Anuthinamum Christhuvudan and the other Magazine. The devotions are thought provoking, helping us/me to reflect my daily walk with God this age of 86. The two sisters Shanthi Ponnu and Darshini Xavier have profound knowledge in the Word of God and quite strong in the theological understanding of our Bible. Kindly convey my sincere thanks and prayers to both. May the Lord, whom we serve, bless you all to be a great blessing to the church & the Nation.

Rev.Dr.Jebaraj Samuel, Chennai.

வாசகர்கள் பேசுகிறார்கள் (ஜனவரி – பிப்ரவரி 2026)

1

சத்தியவசனம் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தை தவறாமல் கிடைக்கப்பெற்று படித்துவருகிறேன். அதில் வேதாகமம் உருவானது எப்படி? வேதாகமம் எப்படி எழுதப்பட்டது? என்று Dr.உட்ரோகுரோல் ஐயா அவர்கள் எழுதியுள்ள கட்டுரை வேதாகமம் உருவான வரலாற்றை எழுதியள்ளது சிறப்பு. களிமண், மரப்பட்டை, மிருகங்களின் தோல், கற்பாறைகளில் எழுதப்பட்டுள்ளன என்று விளக்கியுள்ளது சிறப்பு. அட்டையின் (ஜூலை-ஆகஸ்டு) கடைசி பக்கத்தில் தேவனும் அவரது பரந்த ஞானமும் என்ற தலைப்பில் பத்து அறிஞர்களின் சிந்தனைக்கான கருத்துகளும் அருமையாக இருந்தது. நான் ஓய்வுபெற்ற ஆசிரியர். எனக்காக ஜெபியுங்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Mr.K.Isaac Varathan, Thiruvallur.

வாசகர்கள் பேசுகிறார்கள் (செப்டம்பர் – அக்டோபர் 2025)

1

கடந்த மாத சத்தியவசன தியான செய்திகள் மிகவும் எளிமையாக தெளிவான செய்திகளாக இருந்தது. எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாக இருந்தது. சத்திய வசன ஊழியர்களுக்கும் தியானங்களை எழுதிய Dr.உட்ரோ குரோல் அவர்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

Bro.Ashok kumar.

2

தங்களுடைய மாதாந்திர பத்திரிக்கையும் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகமும் எனது மகன் பெயரில் தவறாமல் கிடைக்கிறது. ஜூலை-ஆகஸ்டு மாத தியானபுத்தகத்தைப் படித்தேன். முன்பக்க அட்டையில் சங்.93:4ஆம் வசனத்தைப் போட்டிருக்கிறீர்கள். சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப் பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்தில் வல்லமையுள்ளவர். இந்த வசனம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

Mr.K.Isaac Varathan, Thiruvallur.

வாசகர்கள் பேசுகிறார்கள் (ஜனவரி – பிப்ரவரி 2025)

1

Dear Brother in Christ, Last month I asked you to pray for my daughter’s transfer. By the Grace of Almighty God she relieved from Trichy to Chennai. Glory to God our Lord Jesus Christ. Thank you.

Mrs.Janet Prabhaker, Tuticorin.

2

கிறிஸ்துவுக்குள் அன்பான ஊழியர்கட்கு, வாட்ஸ் அப்பில் தியானங்களைப் பெற்று வருகிறேன். டிசம்பர் 11ஆம் தேதி தியானம் எனக்காகவே எழுதப்பட்டிருந்தது. ஆண்டவரைத் துதிக்கிறேன். நன்றி.

Mrs.Sornakumari.

3

அன்பு சகோதரருக்கு இயேசுவின் இனியநாமத்தில் ஸ்தோத்திரம், ஐயா, சத்திய வசன வெளியீடு அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகம் மூலம் கர்த்தர் ஒவ்வொருநாளும் எங்களோடு பேசி அதிக ஆறுதல்படுத்துகிறார். ஆண்டவரைப் பற்றி அநேக காரியங்கள் தீர்க்கதரிசிகளின் வரலாறுகளை தெரிந்துகொண்டேன். நான் கலங்கும்போதெல்லாம் ஒவ்வொரு வார்த்தைகளும் என்னை ஆறுதல் படுத்துகிறது.

Mrs. Yogarani, Tirunelveli.

வாசகர்கள் பேசுகிறார்கள் (நவம்பர் – டிசம்பர் 2024)

1

கிறிஸ்துவுக்குள் அன்பான ஐயா அவர்களுக்கு, சத்தியவசன மாதாந்திர பத்திரிக்கைகள் சத்தியவசன சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் தவறாமல் கிடைக்கிறது. அதிக பிரயோஜனமாகவும் தினதியானத்திற்கு உதவியாகவும் உள்ளது. தொடர்ந்து அனுப்பி வைப்பதற்கு எங்கள் நன்றிகள்.

Mrs.Jebarani George, Tirunelveli.

2

சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் அளித்த செய்தி பயனுள்ளதாக இருந்தது. என் தேவன் என்னோடு பேசி என் குறைபாடுகளை உணர்த்தினார். நன்றி.

Mrs.Chandraraj, Chennai.

3

16-09-2024 நாளின் தியானசெய்தி என் இதயத்தைத் தொட்டது. இந்த நல் வார்த்தையின்படியே எரேமி.29:11 என்னை மீட்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என் வாழ்வில் ஒரு புதிய துவக்கத்தைத் தந்தார். எல்லா மகிமையையும் திரியேக தேவனுக்கே செலுத்துகிறேன். ஒவ்வொரு நாளின் தியானங்களும் அனுதின வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக உள்ளது.

Mrs.Vasumathi, Vellore.

வாசகர்கள் பேசுகிறார்கள் (செப்டம்பர் – அக்டோபர் 2024)

1

கிறிஸ்துவுக்குள் அன்புள்ள சத்தியவசனம் ஆசிரியர் அவர்களுக்கு ஸ்தோத்திரம். ஜீவனுள்ள தேவனின் ஜீவவார்த்தையை நான் அனுதினமும் தியானிக்க ஏதுவாக தங்கள் அனுப்பியுள்ள “அனுதினமும் கிறிஸ்துவுடன்” என்ற மாத இதழ் எனது ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அதை தியானித்து ஆவியானவரின் துணையுடன் ஜெபிக்கும் போது அதுவே எனக்குப் புதிய பெலனைத் தருகிறது.

Mr.L.Nelson, Madurai.

2

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர் அவர்களுக்கு, தங்களுடைய அனுதினமும் கிறிஸ்துவுடன் மற்றும் சத்தியவசன சஞ்சிகை தவறாமல் வருவதற்காக நன்றி கூறுகிறேன். அதில் உள்ள தேவனுடைய வார்த்தையானது எனது தனிப்பட்ட வாழ்விலும் குடும்பவாழ்விலும் கர்த்தருக்குள் வளர்வதற்கு மிகமிக உதவி யாயும் ஆலோசனையாகவும் இருக்கிறது. எனக்காகவே என்னுடைய சூழ்நிலைக்கு ஏற்ப தேவனுடைய வார்த்தைகள் இருந்து என்னைப் பெலப்படுத்தி உற்சாகப்படுத்துகிறது.

Mr.Chandrasekar, Bangalore.

3

I watch and enjoy the daily Devotionals in whatsapp page. Very Useful and a blessing for our Spiritual growth Thank you.

Mrs.Hannah Victor, Madurai.

4

Praise the Lord, I use to read the passage in “Anuthinamum Christhuvudan” everyday before I read the biblical passage assigned for the day in some other books. The passage presented everyday in highly appropriate illustrative and easily absorbable in mind. The brief prayer given at the end is a good guide line to submit our request to the Lord. God bless your Ministry to Save the Soul’s of many from will deeds.

Mr.R.S.A.Sundersingh, Nellai.