வாசகர்கள் பேசுகிறார்கள் (ஜனவரி – பிப்ரவரி 2025)

1

Dear Brother in Christ, Last month I asked you to pray for my daughter’s transfer. By the Grace of Almighty God she relieved from Trichy to Chennai. Glory to God our Lord Jesus Christ. Thank you.

Mrs.Janet Prabhaker, Tuticorin.

2

கிறிஸ்துவுக்குள் அன்பான ஊழியர்கட்கு, வாட்ஸ் அப்பில் தியானங்களைப் பெற்று வருகிறேன். டிசம்பர் 11ஆம் தேதி தியானம் எனக்காகவே எழுதப்பட்டிருந்தது. ஆண்டவரைத் துதிக்கிறேன். நன்றி.

Mrs.Sornakumari.

3

அன்பு சகோதரருக்கு இயேசுவின் இனியநாமத்தில் ஸ்தோத்திரம், ஐயா, சத்திய வசன வெளியீடு அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகம் மூலம் கர்த்தர் ஒவ்வொருநாளும் எங்களோடு பேசி அதிக ஆறுதல்படுத்துகிறார். ஆண்டவரைப் பற்றி அநேக காரியங்கள் தீர்க்கதரிசிகளின் வரலாறுகளை தெரிந்துகொண்டேன். நான் கலங்கும்போதெல்லாம் ஒவ்வொரு வார்த்தைகளும் என்னை ஆறுதல் படுத்துகிறது.

Mrs. Yogarani, Tirunelveli.

வாசகர்கள் பேசுகிறார்கள் (நவம்பர் – டிசம்பர் 2024)

1

கிறிஸ்துவுக்குள் அன்பான ஐயா அவர்களுக்கு, சத்தியவசன மாதாந்திர பத்திரிக்கைகள் சத்தியவசன சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் தவறாமல் கிடைக்கிறது. அதிக பிரயோஜனமாகவும் தினதியானத்திற்கு உதவியாகவும் உள்ளது. தொடர்ந்து அனுப்பி வைப்பதற்கு எங்கள் நன்றிகள்.

Mrs.Jebarani George, Tirunelveli.

2

சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சகோ.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் அளித்த செய்தி பயனுள்ளதாக இருந்தது. என் தேவன் என்னோடு பேசி என் குறைபாடுகளை உணர்த்தினார். நன்றி.

Mrs.Chandraraj, Chennai.

3

16-09-2024 நாளின் தியானசெய்தி என் இதயத்தைத் தொட்டது. இந்த நல் வார்த்தையின்படியே எரேமி.29:11 என்னை மீட்டு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என் வாழ்வில் ஒரு புதிய துவக்கத்தைத் தந்தார். எல்லா மகிமையையும் திரியேக தேவனுக்கே செலுத்துகிறேன். ஒவ்வொரு நாளின் தியானங்களும் அனுதின வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக உள்ளது.

Mrs.Vasumathi, Vellore.

வாசகர்கள் பேசுகிறார்கள் (செப்டம்பர் – அக்டோபர் 2024)

1

கிறிஸ்துவுக்குள் அன்புள்ள சத்தியவசனம் ஆசிரியர் அவர்களுக்கு ஸ்தோத்திரம். ஜீவனுள்ள தேவனின் ஜீவவார்த்தையை நான் அனுதினமும் தியானிக்க ஏதுவாக தங்கள் அனுப்பியுள்ள “அனுதினமும் கிறிஸ்துவுடன்” என்ற மாத இதழ் எனது ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் அதை தியானித்து ஆவியானவரின் துணையுடன் ஜெபிக்கும் போது அதுவே எனக்குப் புதிய பெலனைத் தருகிறது.

Mr.L.Nelson, Madurai.

2

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரர் அவர்களுக்கு, தங்களுடைய அனுதினமும் கிறிஸ்துவுடன் மற்றும் சத்தியவசன சஞ்சிகை தவறாமல் வருவதற்காக நன்றி கூறுகிறேன். அதில் உள்ள தேவனுடைய வார்த்தையானது எனது தனிப்பட்ட வாழ்விலும் குடும்பவாழ்விலும் கர்த்தருக்குள் வளர்வதற்கு மிகமிக உதவி யாயும் ஆலோசனையாகவும் இருக்கிறது. எனக்காகவே என்னுடைய சூழ்நிலைக்கு ஏற்ப தேவனுடைய வார்த்தைகள் இருந்து என்னைப் பெலப்படுத்தி உற்சாகப்படுத்துகிறது.

Mr.Chandrasekar, Bangalore.

3

I watch and enjoy the daily Devotionals in whatsapp page. Very Useful and a blessing for our Spiritual growth Thank you.

Mrs.Hannah Victor, Madurai.

4

Praise the Lord, I use to read the passage in “Anuthinamum Christhuvudan” everyday before I read the biblical passage assigned for the day in some other books. The passage presented everyday in highly appropriate illustrative and easily absorbable in mind. The brief prayer given at the end is a good guide line to submit our request to the Lord. God bless your Ministry to Save the Soul’s of many from will deeds.

Mr.R.S.A.Sundersingh, Nellai.

வாசகர்கள் பேசுகிறார்கள் (மே – ஜுன் 2024)

1

அன்பார்ந்த சகோதரருக்கு, ஜனவரி மாதம் அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானத்தில் நம்பிக்கையைக் குறித்த தியானத்திற்காய் ஸ்தோத்திரம். குறிப்பாக ஜனவரி 12ந்தேதி பரிசுத்த ஆவியின் பலத்தினாலே நமக்கு நம்பிக்கை பெருகும்படி என்ற ரோமர் 15:13 வசனம் அதிகமாய் எங்களை உற்சாகப்படுத்தியது. நன்றி.

Mrs.Prema Williams, Secunderabad.

2

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தின் ஏப்ரல் மாதத்தில் நான்கு சுவிசேஷங்களிலிருந்தும் கிறிஸ்துவைக்குறித்து தேவசெய்தியை மிக அருமையாக விளக்கிக் கூறியிருக்கிறீர்கள். என்னுடைய ஆவிக்குரிய வாழ்வுக்கு தேவசெய்தி மிகவும் பிரயோஜனமாக இருந்தது. நன்றி.

Sis.Amutha

3

Dear Brother in Christ, Loving Greetings in the blessed name of Christ our Lord. I thank & Praise God for the blessed Ministries of Sathiyavasanam. The daily devotion book happens to be a spiritual book in our daily walk with God. Those who write the devotions truly receive divine interpretations & Revelations form God which give much comfort & spiritual guidance. The Sanjigai also is so encouraging & thought provoking.

Rev.Dr.Jebaraj Samuel, Chennai.

4

Dear Brothers of Christ, I am receiving regularly your Precious Devotion books “Anuthinamum Christhuvuden” bi-monthly and Sathiyavasanam bi-monthly. They are valuable Publications which are very useful for morning prayer. They are very beneficial for development of one’s Spiritual life. They abound with spiritual Wisdom and they are filled with deep Biblical insights. I am praying for your Ministry.

Mr.P.Vincent, Srivilliputhur.

5

சத்தியவசன ஊழியர்கட்கு, சத்தியவசன பத்திரிக்கைகளை ஒழுங்காக பெற்று வருகின்றோம், தினதியானம் அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் மிக பிரயோஜனமாக தினமும் தியானிப்பதற்கு மிக உதவியாக உள்ளது. நன்றி.

Mrs.Jebarani George, Tirunelveli.

6

Praise the Lord brother, Very useful daily bread in our life. I will pray continuously your Ministry and all. Praise God.

Sis.Shanthi Rani

வாசகர்கள் பேசுகிறார்கள் (மார்ச் – ஏப்ரல் 2024)

1

Praise the Lord Brother, By the Grace of God I received our devotional book … It was Great joy for me, Because every day this message gives me spiritual knowledge, strength, comfort, Warnings and guidance. I can’t express in words. Thanks God for this wonderful Ministry.

Mrs.Vasumathy, Vellore.

2

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தில் பிரசுரமாகும் அட்டவணைப்படி 2023 ஆம் ஆண்டில் வேதாகமத்தை வாசித்து முடிக்க கர்த்தர் கிருபை செய்ததற்காக ஸ்தோத்திரம். அனுதின வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக உள்ளது.

Mr.Gurunath Rajasekeran, Chennai.

3

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகம் தவறாமல் வருகிறது. நாங்கள் தினம் குடும்ப ஜெபத்தில் அதை வாசித்து பிரயோஜனமடைந்து வருகிறோம். மிகவும் ஆசீர்வாதமாக இருக்கிறது.

Mrs.M.Samuel, Nellikupam.

4

அன்பான சகோதரருக்கு, அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாயிருக்கிறது. புது நம்பிக்கையையும் பெலனையும் தருகிறது.

Mr.T.J.W.Orijin, Kanyakumari.

5

Dear Brother in Christ, Thanks for all your books daily reading books in good messages, invitations. praying for your services. Thanks once again.

Mrs.Prema Johnson, Chithoor.

6

சத்தியவசன இருமாத கையேட்டில் தரப்படும் புதிரும், அதற்கு விடையளிக்கக் கொடுக்கப்படும் வேதபகுதியும் அருமை. ஏற்கனவே வாசித்திருந்தாலும் அநேக வசனங்களை நினைப்பூட்டும் வகையிலும், அநேக வசனங்களை கண்டுபிடிக்கும் வகையிலும் வினாக்கள் அமைந்துள்ளன. தேடி வாசித்து விடை எழுதுவது ஆசீர்வாதமாக உள்ளது. கர்த்தருக்குத் துதி.

Mrs.Nirmala Oliver, Chennai.

7

இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற தியானநூல் வாழ்விற்கு நம்பிக்கையூட்டுவதாகவும், ஆறுதலாகவும் உள்ளது. மேலும் இரவில் ஏதேனும் மனக்குழப்பமிருக்கும்பொழுது, அடுத்த நாள் காலையில் அதற்கான விடை இந்தநாளின் தியானத்தில் காணப்படுகிறது. வார்த்தையின் மூலமாக கர்த்தர் என்னோடு பேசுகிறார் என்பதை உணருகிறேன். மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Mrs.Mercy, Chennai.

8

Praise the Lord, Really all your today’s posters (whatsapp) are so blessings and wonderful. Congrats and thank you so much brother.

Mr.Antony

வாசகர்கள் பேசுகிறார்கள் (ஜனவரி – பிப்ரவரி 2024)

1

Dear Brother, Greatly blessed by your Ministries and particularly your TV Programs. They are very useful to our Spiritual life. May our Almighty God Bless you all involved in carrying out this wonderful Ministries abundantly. Remembering in prayers.. Thanks.

 Mr.Dinakar paul, Chennai.

2

முதன்முதலாக இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். என் நண்பர் ஒருவர் மூலமாக அனுதினமும் கிறிஸ்துவுடன் இதழ்களைப் படித்து தியானித்து மிகுந்த ஆசீர்வாதத்தைப் பெற்றுள்ளேன். அதற்காக ஆண்டவருக்கும் உங்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

Mr.Alphonse Fredrick, Bangalore.

3

சத்தியவசன வெளியீடுகளான அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசனம் சஞ்சிகை அனுதின வாழ்க்கைக்கு ஆசீர்வாதமாக உள்ளது. அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தின் தினசரி வேதவாசிப்பு அட்டவணைப்படி வருடத்தின் ஆரம்பம் முதல் இப்பொழுது வரை தவறாமல் படித்துவருகிறேன். ஒருவருடத்திற்குள் படித்து முடிப்பதற்கு அதிக பிரயோஜனமாக உள்ளது.

Sis.Jacquiline Punithavathi, Chennai.

4

Dear Brother in Christ, we received ‘Parables of Jesus Christ’ Book. Thank you. God bless us through Sathiyavasanam Magazines. I pray for that in my prayer time always. God bless you all.

Sis.Kamala Robert, Coimbatore.

5

உங்களது காலைப் பதிவுகள் (Whatsapp) ஓய்வுநாளின் சிந்தனைக்கு அருமையான ஆசீர்வாதமான பதிவுகள் சிந்திக்க, செயல்பட உற்சாகம் கொள்ள செய்தது. நன்றிகள். பாராட்டுக்கள்.

Mr.Antony