சத்தியவசன இணைய தளத்திற்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல் கூறி உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுக்கு சேவை செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன ஊழியமானது வெகுஜன தொடர்பு ஊழியமாகும் தமிழில் இந்த வெப்சைட்டில் இடம் பெற்றுள்ள எமது ஊழிய ஸ்தாபனத்தைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என நம்புகிறோம். மேலும் இதில் இடம் பெற்றுள்ள ஆவிக்குரிய செய்திகள் மற்றும் தியானங்கள் நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலமடையவும் ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கவும் உதவியாயிருக்கும். இதன் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் உங்கள் மேலான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் ஜெபக்குறிப்புக்களையும் ஆவிக்குரிய தேவைகளையும் எங்களிடம் தெரிவிக்கலாம். உங்களுக்காக ஜெபிக்கவும் உங்களுக்கு ஆலோசனை அளிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். இந்த வெப்சைட்டிற்கு வருகைதரும் போது நீங்கள் எங்கள் நண்பர்களாகிறீர்கள். மேலும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடனான உறவிலே நீங்கள் மகிழ்ந்திருக்கவும் அதில் நிலைத்திருக்கவும் அதற்கு நாங்கள் உதவவும் விரும்புகிறோம்.

It is a pleasure to serve you. We trust that the information and available material in Tamil language will be blessing to you, your family and friends. Sathiya Vasanam Ministry is a Unit of The Good News Broadcasting Society. It is a media ministry and we seek to touch lives with the blessing of God’s Word. You will find interesting information that will enrich you spiritual walk with the Lord Jesus and you can begin a closer walk with the Lord through the study of His Word. We welcome you to respond with any need or prayer request you may have. We are available to help you as best as we can and pray for you and your needs. When you log on to our website, you become our friend and we want to do all we can to make your relationship with Jesus Christ enjoyable and fulfilling. Thank you for choosing to log on to www.sathiyavasanam.in

ஜெபக்குறிப்பு: 2023 மே 30 செவ்வாய்

கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான் (நீதி.29:25) என்ற வாக்குப் படியே இம்மாதம் முழுவதும் தங்களது மனப்பூர்வமான காணிக்கையாலும் ஜெபத்தாலும் தாங்கிவந்த அனைத்து பங்காளர்கள் ஆதரவாளர்கள் நேயர்களை கர்த்தர் ஆசீர்வதித்து அவர்கள் களஞ்சியங்களை பூரணமாய் நிரம்பச் செய்ய வேண்டுதல் செய்வோம்.

நீ எங்கே இருக்கிறாய்?

தியானம்: 2023 மே 30 செவ்வாய் | வேத வாசிப்பு: ஆதியாகமம் 3:6-10

YouTube video

அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார் (ஆதி. 3:9).

இப்பொழுதெல்லாம் அனைவரது கையிலும் எந்நேரத்திலும் கைதொலைபேசி இருப்பதால், அழைப்புக்களும் ஓய்வில்லாமல் வந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், நாம் ஒரு நூலகத்தில் இருக்கிறபோதும், படுத்து உறங்கிக்கொண்டு இருக்கிறபோதும், வீட்டில் இருக்கிறபோதும் வருகிறதான தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் பேசுகிற விதங்களில் நிறையவே வித்தியாசங்கள் உண்டு. காரணம் நாம் எங்கேயிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம், அதன் அடிப்படையிலேயே பேசுவோம்.

இங்கே, கீழ்ப்படியாமையினாலே பாவத்தில் வீழ்ந்துபோன ஆதாம் இப்போது தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்டு, அவருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே அவனது மனைவியோடுகூட ஒளித்துக்கொண்டிருக்கிறான். அப்பொழுதுதான் தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு, “நீ எங்கே இருக்கிறாய்” என்கிறார். அவன் எங்கே இருக்கிறான் என்பது கர்த்தருக்குத் தெரியாதா? தெரியாததால் கர்த்தர் ஆதாமைக் கூப்பிடவில்லை. அவன் எங்கே இருக்கிறான் என்பதை ஆதாமே உணர்ந்து கொள்வதற்காகவே கர்த்தர் கேட்கிறார். அப்போதுதான் ஆதாம் தனது நிலையை உணருகிறான். “நான் நிர்வாணியாய் இருக்கிறேன், பயந்துபோய் ஒளித்துக்கொண்டிருக்கிறேன்” என்கிறான். அப்பொழுது தேவன், “நான் புசிக்க வேண்டாம் என்று விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ” என்றபோது, “நீர் தந்த ஸ்திரீதான் தந்தாள்” என்று ஏவாளைக் குற்றஞ்சாட்டிய பின்பே, தான் புசித்ததை ஒப்புக்கொள்ளுகிறான்.

தேவபிள்ளையே, இன்று நாமும்கூட தவறு இழைத்துவிட்டு, அதை நியாயப்படுத்த முனைவதுண்டு. நமது தவறுக்குப் பிறரை அல்லது சூழ்நிலையைச் சாக்கு சொல்வதுண்டு. நாம் பாவத்தில் விழுந்தால் முதலாவது எங்கே இருக்கிறோம் என்பதை உணரவேண்டும். தேவனுடைய சமுகத்தினின்று, அவர் வார்த்தையினின்று விழுந்துவிட்டோம் என்பதைப் புரிந்திடவேண்டும். அடுத்து, நாம் செய்த தவறுக்கு நாமேதான் பொறுப்பேற்க வேண்டும். தவறை உணர்ந்தவனே, மனந்திரும்பி வாழுவான். சாக்குப்போக்குச் சொல்லித் தப்ப நினைப்பவன் ஒரு போதும் மனந்திரும்பமாட்டான். இன்று நாம் எங்கே இருக்கிறோம் என்பதை நிதானித்துப் பார்ப்போம். தேவனைவிட்டு விலகியிருந்தால், மீண்டும் தேவனண்டை திரும்புவோம். நாம் தவறின நேரங்களை நினைத்துப் பார்த்து, தேவனிடத்தில் மன்னிப்பைப்பெற்று மீண்டும் தேவனோடு வாழத் தொடங்குவோம். நாம் எங்கே நிற்கிறோம் என்பதைத் தேவன் அறிவார். ஆனால், நாம் அதை உணர வேண்டும். எப்போது அதை உணருகிறோமோ அன்றே நமக்கு இரட்சண்ய நாள்!

உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன் (சங்கீதம் 139:7).

ஜெபம்: அன்பின் தேவனே, உமது சமுகத்தைவிட்டு விலகினதை உணரும்படியான இரு தயத்தை எங்களுக்குத் தந்து உம்மண்டை கிட்டிச்சேரும் பாக்கியத்தைத் தாரும். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (மே – ஜுன் 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

உலக இரட்சகராக இவ்வுலகில் வந்த கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மே-ஜுன் மாத அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானபுத்தகத்தை வெளியிட கர்த்தர் கிருபை செய்திருக்கிறார். தியான புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தியானங்கள் ஒவ்வொன்றும் கடைசிகாலத்தில் வாழுகின்ற நமக்கு அதிகப் பிரயோஜனமாக இருக்க ஜெபிக்கிறோம். தியானங்கள் வாயிலாக தாங்கள் பெற்றுவரும் ஆசீர்வாதங்களையும் எங்களோடு பகிர்ந்துகொள்ள அன்பாய் கேட்கிறோம். இப்புத்தகத்தை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்தி வையுங்கள். தங்களது உறவினர்கள், நண்பர்கள், சகவிசுவாசிகளின் முகவரிகளை எங்களுக்குத் தெரியப்படுத்தினால் அவர்களுக்கு மாதிரி பிரதியை நாங்கள் அனுப்பிவைப்போம்.

சத்தியவசன வெளியீடுகள் பிரிண்ட் பண்ணுவதற்கு பேப்பர் தடையின்றிக் கிடைக்கவும், பிரிண்டிங்கில் உள்ள தாமதம் நீங்கவும், உரியநேரத்தில் பங்காளர்களுக்கு வெளியீடுகள் அனுப்பிவைக்கவும், தபாலில் தவறாமல் பங்காளர்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கும் பாரத்தோடு ஜெபிக்க அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் தொடர்ந்து வெளிவருவதற்கு உள்ள பணத்தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் ஜெபியுங்கள். தேவன் உங்களை ஏவுவாரானால் ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து தாங்கவும் அன்புடன் வேண்டுகிறோம்.

பங்காளர் குடும்பத்திலுள்ள அரசுத்தேர்வு, கல்வி இறுதியாண்டு தேர்வு எழுதின எல்லாப் பிள்ளைகளது சிறந்த தேர்ச்சிக்காகவும், புதிய கல்வியாண்டை தேவன் ஆசீர்வதிப்பதற்கும் ஜெபிக்கிறோம்.

இவ்விதழில் மே மாதத்தில் உடைக்கப்படுதலின் அனுபவத்தைக் குறித்தும், அதனால் நாம் அடையும் ஆசீர்வாதங்களைக் குறித்தும் தியானங்கள் இடம்பெற்றுள்ளன. ஜுன் மாதத்தில் இடம்பெற்றுள்ள தியானங்கள் கிறிஸ்துவுக்குள்ளான நமது வாழ்வை நாம் ஆராய்ந்து பார்ப்பதற்கு ஏதுவாய் அமைந்துள்ளது. இரு மாதங்களின் தியானங்களையும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகள் அனைவரையும் உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

பராக்கிரமசாலி!

அதிகாலை வேளையில்… (மே – ஜுன் 2023)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: நியாயாதிபதிகள் 6:11-14

அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார் (நியாயாதிபதிகள் 6:14).

ஒருவேளை நாம் கிதியோனின் அயலகத்தாராய் இருந்திருந்தால், ஒருநாள் அவர் இஸ்ரவேலின் பெரிய தளபதியாகவும், புகழ்பெற்ற நியாயாதிபதியாகவும் மாறுவார் என நினைத்திருக்கமாட்டோம்; ஆனால் அதுவே நிகழ்ந்தது. கிதியோன் திராட்ச ஆலைக்கு அருகே இருந்த களத்தில் இரகசியமாக கோதுமையைப் போரடித்துக் கொண்டிருந்தபோது, “பராக்கிரமசாலியே” (நியா.6:12) என்று அவனை கர்த்தருடைய தூதன் அழைத்ததைக் கேட் டதும் அவன் அதிர்ச்சிக்குள்ளானான்.

பாகாலின் பீடத்தைத் தகர்த்து தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டவேண்டும் என்று தைரியமாக அவன் கூறியது அவனுடைய நண்பர்களுக்கும் ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கும். அவன் ஒரு சிறிய படையைத் திரட்டி மீதியானியரைத் தோற்கடித்தான். பயந்த அவன் தைரியசாலியானான். அவனுடைய இந்த மாற்றத்தின் இரகசியம் யாது? அவன் தேவனால் அனுப்பப்பட்டான். அவர் தம்முடைய வாக்குறுதியைக் காத்துக்கொள்வார் என நம்பினான். நாம் யார் என்பதோ, நம்மால் என்ன முடியும் என்பதோ முக்கியமல்ல. நாம் தேவனால் அனுப்பப்பட்டோமா என்பதே முக்கியம்.

தேவனுடனான முதல் சந்திப்பில் வெளிப்பட்ட கிதியோனுடைய அவிசுவாசம் அனைத்தையும் பாழாக்கிவிடுவது போல் இருந்தது. “கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்”. தேவனை நோக்கிப்பார்த்து அவருக்குக் கீழ்ப்படியாமல் தன் சூழ்நிலையைப் பார்த்ததே கிதியோன் செய்த தவறு ஆகும். எந்த சூழ்நிலைகளும் நமது சர்வவல்ல தேவனை ஒரு போதும் பாதிக்காது; ஏனெனில் இயலாதவற்றையும் செய்ய அவர் அதிகாரமுடையவர். உண்மையான ஜீவனுள்ள தேவனை விசுவாசித்து நீங்கள் வாழ்ந்தால் வினா எழுப்பமாட்டீர்கள். அவருடைய வாக்குறுதியை நம்புவீர்கள்.

கிதியோன் தன் நிலையைப் பார்த்து இன்னும் அதிகமாக அதைரியமடைந்தான்.”அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான்” (வச.15). ஆனால் தேவன் அவனை “பராக்கிரமசாலியே” என்று அழைத்து விட்டார். தேவன் கூறுவது அனைத்தும் உண்மையாகவே இருக்கும்.

“ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்” (1கொரி.1: 27- 29).

கிதியோன் தேவனால் தகுதி பெற்றான், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட நாமும்தான்!

எபிரெயர் 11:32இல் தங்களை அனுப்பின தேவனுக்காக பெரிய காரியங்களைச் செய்து அவரை மகிமைப்படுத்திய விசுவாச வீரர்களின் பட்டியலில் கிதியோனும் இடம் பெற்றுள்ளார். தேவன் நம்மை அனுப்பும்பொழுது அவரும் நம்முடன் வருகிறார்; நம்முடன் தங்குகிறார். “இதோ நான் உங்களுடன் கூட இருக்கிறேன்” என்று வாக்களித்த தேவன் அவர்களைத் தாங்கினார். அவருடைய வாக்குறுதி இன்றும் நம்மைத் தாங்குகிறது. தேவன் ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளித்தார் (ஆதி.26:3), யாக்கோபுக்கு (ஆதி. 31:3), மோசேக்கு (யாத்.3:12), யோசுவாவுக்கு (யோசுவா 1:5,9) எரேமியாவுக்கு (எரே.1:8,19), அப்.பவுலுக்கு (அப்.18: 9-10) கிறிஸ்தவ விசுவாசி ஒவ்வொருவருக்கும் (எபி.13:5-6) இவ்விதமான வாக்குறுதி அளித்துள்ளார். “உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா˜”, “நான் உன்னோடே இருக்கிறேன்” என்ற வாக்குறுதிகள் எந்த ஒரு கிறிஸ்தவனையும் தைரியசாலியாக்கிவிடும்.

என் நண்பர் அனுப்பிய ஒரு சிறு கவிதை இந்த தியானத்தின் சுருக்கத்தை விளக்குவதாக அமைந்துள்ளது.

சூழ்நிலையைப் பார்த்தால் அது துயரத்தைத் தரும்;
சுயத்தைப் பார்த்தால் அது மனச்சோர்வை அளிக்கும்;
ஆனால் விசுவாசத்தோடு இயேசுவைப் பார்த்தால்
அது உங்களுக்கு ஆசீர்வாதத்தை அளிக்கும்.

“விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபிரெயர்12:1-2).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள் (மே – ஜுன் 2023)

1

Dear Brother in Christ, I feel so much happy in blessed towards your wonderful posters (whatsapp) daily in very much appreciated to you. I am so blessed in very impressed with your daily posters… Thank you.

Mr.G.Antony.

2

Dear Brother in Christ, Praise God. Your team prayer brings more victorius of my daughters life. She had leg pain eighty percent OK relief for through prayer and regular physiothrephy treatment. She got a Job in ESI Medical College in Chennai. Thank God.

Mr.Paul Inbanathan, Salem.

3

கிறிஸ்துவுக்குள் அன்பான ஐயா அவர்களுக்கு, நாங்கள் பல ஆண்டுகளாக சத்தியவசன பங்காளர்களாக இருந்துவருகிறோம். அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்கள் முதிர்வயதில் உள்ள எனக்கும் எனது மனைவிக்கும் நாங்கள் இருக்கும் சூழ்நிலைக்கேற்றவாறு உள்ளன. சகோதரி அவர்களுக்காகவும் ஊழியங்களுக்காகவும் ஜெபிக்கிறோம்.

Mr.Selvaraj, Nazareth.

4

Dear Brother in Christ, Pray for a Rental house in UK for my daughter’s family to settle last month we prayed for the same. May God listen our prayers and do a miracle. Praise God.

Mrs.Julina

5

Praise the Lord, We got Sathiyavasanam Calendar. Thanks for monthly Magazines, we are really blessed by daily reading & meditation. We are daily praying for you all of Sathiyavasanam Ministry. May God bless you.

Sis.Sarah Grace, Nagapattinam.

6

அன்பான தேவ ஊழியருக்கு, தங்களின் ஜெபகடிதம் கிடைக்கப் பெற்றேன். தங்களின் வேதபாடங்களைப் பற்றியும், நிகழ்ச்சியைப் பற்றியும் ஆண்டவர் வேதத்தில் சொன்ன கருத்துக்களையும் எனது தோழி மூலம் தெரிந்து கொள்வேன். ஆண்டவரைப்பற்றி இருவரும் பேசுவோம். எங்களுக்காய் ஜெபியுங்கள்.

Sis.Rajeswari, Vellery

சத்திய வசனம் (மார்ச்-ஏப்ரல் 2023)