சத்தியவசன இணைய தளத்திற்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல் கூறி உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுக்கு சேவை செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன ஊழியமானது வெகுஜன தொடர்பு ஊழியமாகும் தமிழில் இந்த வெப்சைட்டில் இடம் பெற்றுள்ள எமது ஊழிய ஸ்தாபனத்தைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என நம்புகிறோம். மேலும் இதில் இடம் பெற்றுள்ள ஆவிக்குரிய செய்திகள் மற்றும் தியானங்கள் நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலமடையவும் ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கவும் உதவியாயிருக்கும். இதன் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் உங்கள் மேலான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் ஜெபக்குறிப்புக்களையும் ஆவிக்குரிய தேவைகளையும் எங்களிடம் தெரிவிக்கலாம். உங்களுக்காக ஜெபிக்கவும் உங்களுக்கு ஆலோசனை அளிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். இந்த வெப்சைட்டிற்கு வருகைதரும் போது நீங்கள் எங்கள் நண்பர்களாகிறீர்கள். மேலும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடனான உறவிலே நீங்கள் மகிழ்ந்திருக்கவும் அதில் நிலைத்திருக்கவும் அதற்கு நாங்கள் உதவவும் விரும்புகிறோம்.

It is a pleasure to serve you. We trust that the information and available material in Tamil language will be blessing to you, your family and friends. Sathiya Vasanam Ministry is a Unit of The Good News Broadcasting Society. It is a media ministry and we seek to touch lives with the blessing of God’s Word. You will find interesting information that will enrich you spiritual walk with the Lord Jesus and you can begin a closer walk with the Lord through the study of His Word. We welcome you to respond with any need or prayer request you may have. We are available to help you as best as we can and pray for you and your needs. When you log on to our website, you become our friend and we want to do all we can to make your relationship with Jesus Christ enjoyable and fulfilling. Thank you for choosing to log on to www.sathiyavasanam.in

ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 25 திங்கள்

ஆந்திரா எல்லையில் அமைந்துள்ள திருவள்ளுர் மாவட்டத்தின் ஆட்சியாளர் மற்றும் நகராட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள் யாவருக்காகவும் ஜெபிப்போம். அந்த மாவட்டத்தில் கூடுதலான தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கும், திருச்சபைகளில் எழுச்சியும் ஐக்கியமும் காணப்பட்டு, கிராமங்களில் சபைகள் கட்டப்படவும் மிஷனரி பாரம் உண்டாகவும் ஜெபிப்போம்.

நீதியின் சூரியன்

தியானம்: 2023 செப்டம்பர் 25 திங்கள் | வேத வாசிப்பு: மல்கி.4:1-3; மீகா 7:10-17

YouTube video

ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும் (மல்கியா 4:2).

”இதோ சூளையைப் போல் எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ் செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களை சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப் பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் … ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள் (மல்கியா 4:2) என்று தேவனைப் பார்த்து தங்களுடைய நிந்தைகளிலும் வேதனைகளிலும் கேள்விகளை எழுப்பிய மக்களுக்கு கர்த்தர் கூறுகின்றார்.

அகந்தைக்காரர்களையும் துன்மார்க்கர்களையும் பார்க்கும்போது அவர்கள் வேர் ஊன்றி மிக வன்மையுடன் வாழ்வதைப்போல் தங்களுடைய அநியாயத்தில் அடக்குமுறையில் தேவபயமில்லாமல் ஒரு சௌகரியமான வாழ்க்கையை வாழலாம். அந்த வாழ்க்கை வெளியரங்கமாக நிலையான செழுமையான வாழ்க்கைப்போல காணப்பட்டாலும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு திடீரென ஒருநாள் அவர்கள் மேல் வரும். அப்பொழுது அவர்கள் பட்டயத்தினால் சாவார்கள் (ஆமோஸ் 9:10). அகந்தையான பேச்சுகளைப் பேசினவர்கள் தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள். … நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள் (மீகா 7:16,17).

தேவபிள்ளையே! கடந்தகாலங்களில் துன்மார்க்கர் உங்களைப் பழிவாங்கி இருக்கின்றார்களா? உங்களுக்கு விரோதமாக வழக்கு தொடரப்பட்டுள்ளதா? அநியாயமாக உங்கள்மேல் பழி சுமத்தப்படுகின்றதா? மகனே. மகளே கலங்காதே. ஒருநாள் நீதியின் சூரியன் உன்மேல் உதிக்கும். அப்பொழுது நீ அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியமாய் இருப்பாய். உன்னை நிந்தித்தவர்கள், உன் மேல் வீண் பழி சுமத்தியவர்கள் யாவரும் தங்கள் வாய்களை மூடிக்கொள்வார்கள். உனக்கு எதிராக எழும்பியவர்கள் நடுநடுங்கி உனக்குப் பயப்படுவார்கள். அநியாயக்காரர், அக்கிரமக்காரர் யாவரும் அதில் சாவார்கள். கர்த்தர் உனக்காக யுத்தம் செய்வார். நீயோ உன்னுடைய மனச்சோர்வுகளிலிருந்தும் உன் வேதனையான சூழ்நிலைகளிலிருந்தும் வெளிவந்து கொழுத்த கன்று களைப்போல வாழ்வாய். அல்லேலூயா! இது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி!

உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம் (ஏசா-60:20).

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, துன்மார்க்கர் எங்களை மிகவும் நெருக்கி வேதனைப் படுத்தினாலும், நாங்கள் உமது வார்த்தையின்படி வாழும்போது நீர் எங்கள்மேல் நீதியின் சூரியனை உதிக்கப்பண்ணுகிறதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கின்றோம். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (செப்டம்பர் – அக்டோபர் 2023)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வெளிவர தேவன் கிருபை செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறோம். இத்தியானங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம். சத்தியவசன ஊழியங்களை தங்கள் ஜெபங்களில் தாங்குகிற ஒவ்வொருவருக்கும் ஆண்டவருடைய நாமத்தினாலே நன்றிகளைத் தெரிவிக்கிறோம். தொடர்ந்து இத்தியானங்கள் வாயிலாக அநேகமாயிரமான மக்களது வாழ்க்கையிலே கர்த்தர் மகிமையான காரியங்களைச் செய்யும்படியாக உங்கள் ஜெபங்களில் வேண்டுதல் செய்யுங்கள்.

மணிப்பூர் மாநிலத்தின் சமாதானத்திற்காகவும் முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்வதற்கும் அவர்களது இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கும் இடைவிடாது மன்றாடுவோம். அதைத் தொடர்ந்து அரியானா மாநிலத்தில் ஏற்பட்ட கலவரங்களினாலே பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் அங்கு கர்த்தர் சமாதானத்தை நிலவச்செய்யவும் மற்ற இடங்களிலும் இப்படிப்பட்ட கலவரங்கள் பரவாதபடி தேசத்தின் அமைதிக்காக சமாதானத்திற்காக தொடர்ந்து நாம் பாரத்தோடு ஜெபிப்போம்.

சத்தியவசன வெளியீடுகள் பிரிண்ட் பண்ணுவதற்கு அச்சுத்தாளின் கடுமையான விலை ஏற்றத்தினால் இருமாத வெளியீடுகளின் ஆண்டு சந்தா உயர்த்தப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் இதை கவனத்தில் கொள்ள அன்புடன் கேட்கிறோம். சத்திய வசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று ஆசீர்வாதமடையுங்கள். இந் நிகழ்ச்சிகளின் மூலமாக அநேகமாயிரமான ஆத்துமாக்கள் சந்திக்கப்படுவதற்கும் நிகழ்ச்சிகள் தடைகளின்றி ஒளிபரப்பு ஆவதற்கும் வேண்டிக்கொள்ளுங்கள்.

இவ்விதழில் செப்டம்பர் மாதத்தில் பல்வேறு தியானங்களை தொகுத்து வழங்கியுள்ளோம். அக்டோபர் மாதத்தில் சகோ.நீரியஸ் பெர்னாண்டோ அவர்கள் எழுதிய தியானங்கள் இடம்பெற்றுள்ளன. தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகள் அனைவரையும் உங்கள் ஜெபங்களில் தாங்க அன்பாய் கேட்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்

மதிப்பிடும் தேவன்!

அதிகாலை வேளையில்… (செப்டம்பர் – அக்டோபர் 2023)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: 1சாமுவேல் 2:1-10

இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ? (1சாமுவேல் 2:3).

அன்னாள் தேவபக்தியுள்ள ஒரு பெண்மணி. ஆனால் அவள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டாள். அன்னாளுக்குக் குழந்தையில்லாததால், அவளுடைய கணவனின் இரண்டாவது மனைவி பெனின்னாள் பரியாசம் பண்ணி அவளை அழவைப்பாள். பிரதான ஆசாரியனான ஏலியும் அவள் குடித்திருக்கிறாள் என எண்ணினார். யோசேப்பு, தாவீது, எரேமியா, பவுல் போன்ற தேவபக்தர்களைப்போலவே இவளும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாள். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும்கூட “சாத்தானுடன் தொடர்புடையவர்” என குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் ஆண்டவர், அன்னாளின் விண்ணப்பத்தைக் கேட்டு அவளுக்கு ஓர் ஆண் மகனை அருளினார். அவனுக்கு சாமுவேல் என பெயரிட்டு ஆசரிப்புக் கூடாரத்தில் தேவபணி செய்ய ஒப்படைத்தாள். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் சாமுவேல் ஒரு வல்லமையான தீர்க்கதரிசியாக விளங்கினார். மக்கள் நம்மை தவறாகப் புரிந்துகொள்ளும் நேரங்களில் அன்னாளின் இந்த மகிழ்ச்சியான துதிப்பாடலின் வரிகள் நம்மை ஆறுதல் படுத்தி உற்சாகப்படுத்துகின்றன.

தேவன் சகலத்தையும் அறிவார்:

மற்ற மனிதர்கள் சிந்திப்பதையும் அவர்களது சொற்களையும் தேவன் அறிவார். உங்களுடைய சிந்தனையையும் சொல்லையும் அவர் அறிவார் (சங்.139: 1-6). ஒவ்வொருவருடைய இருதயத்தில் இருப்பதையும் அவர் அறிவார் (அப்.1: 24). “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்” (எபி.4:13). நம்முடைய இருதயத்தையே நாம் அறிய மாட்டோம் (எரே.17:9). ஆண்டவருக்காக தான் மரிக்கவும் ஆயத்தம் என்று பேதுரு எண்ணியிருந்தார். ஆனால், தான் அவரை மூன்றுமுறை மறுதலித்ததை அறிந்து வருத்தம் கொண்டார். மக்கள் உங்களைப் பற்றி பொய் சொல்வார்களானால் கவலைப்படாதீர்கள். உங்கள் பரலோக தகப்பன் உண்மையை அறிவார்; ஒருநாளில் உண்மையை வெளிப்படுத்துவார்.

தேவன் மக்களையும் அவர்களது செயல்களையும் மதிப்பிடுபவர். மனம் மாறியவர்கள் கணிக்கப்பட்டு அவர்கள் கவனிக்கப்படவேண்டும் என்று நற் செய்தியாளர் டி.எல்.மூடி அடிக்கடி கூறுவார். நம்முடைய ஆண்டவரும் மக்கள் சொல்வதையும் செய்வதையும் அளவிடுகிறார். கீழ்மக்கள் மாயையும், மேன் மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள் (சங்.62:9). “மாயை, மாயை, எல்லாம் மாயை” என்று பிரசங்கி சொல்லுகிறான். Hevel என்ற எபிரெய சொல்லை 83 முறை பிரசங்கி புத்தகத்தில் சாலொமோன் இங்கு பயன் படுத்தியுள்ளார். அதற்கு “மாயை, ஒன்று மில்லாமை, பயனற்றது” என்று பொருள் கூறலாம்.

தேவனுடைய சித்தத்தில் வாழும் வாழ்வே திடமானதும் நிறைவானதும் ஆகும். அவரது சித்தத்துக்கு வெளியே வாழும் வாழ்வு அர்த்தமற்றதும் வெறுமையானதுமே. நாம் பேசுவதற்கு முன் நம்முடைய வார்த்தைகளை சிந்தித்துக் கூறவேண்டும், ஏனெனில் தேவன் அவ்வாறே செய்கிறார். நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும் என்று சாலொமோன் எழுதியுள்ளார் (நீதி.15:28). சபையில் கூறப்படும் வார்த்தைகளையும் நாம் நிதானிக்கவேண்டும். ஏனெனில் அவை தேவனுடைய வார்த்தைக்கு ஒத்துப்போகாதிருக்கலாம் (1கொரி. 14:29). எனவேதான் ஆண்டவராகிய இயேசு: மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று எச்சரிக்கிறார் (மத்.12:36). தேவன் நமது நோக்கங்களையும்(நீதி.16:2) நம்முடைய இருதயத்தையும் (நீதி.21:2;24:12) நிறுத்துப்பார்க்கிறார். ஒருவரும் காண முடியாதவற்றையும் தேவன் காண்கிறார்; கேட்கமுடியாததையும் அவர் கேட்கிறார்.

தேவன் கனமானவற்றுக்கு வெகு மதியளிக்கிறார். தேவனுக்கு ஊழியம் செய்யும்பொழுது விலைமதிப்பற்ற மரம், மற்றும் புல் வைக்கோல் இவைகளை யல்லாது விலையுயர்ந்த தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த கற்களை பயன்படுத்தும்பொழுது தேவன் அவற்றையும் அளவிடுகிறார்; இவ்வுலகில் இல்லையென்றாலும் மறுவுலகில் நாம் வெகு மதிகளைப் பெறுவோம் (1 கொரி. 3:12-17; எபே.6:8; கொலோ. 3:23-24).

போத்திபாரின் மனைவி யோசேப்பின் பேரில் பொய்யான குற்றம் சுமத்தி அவனைச் சிறையில் அடைத்தாள். ஆனால், தேவன் அவனை உயர்த்தினார். சவுல் அரசர் தாவீதைத் தவறாகப் புரிந்துகொண்டு அவனைக் கொல்லப் பார்த்தார். ஆனால் தாவீதின் உத்தமம் நிரூபணமானது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும் உயிர்த்தெழுதலினாலும் மகிமையின் பரமேறுதலினாலும் நியாயப்படுத்தப்பட்டார்.

பெல்ஷாத்சார் அரசர் உலகத்தின் அளவீட்டை வைத்து தான் வல்லமையானவர் என்றும், செல்வந்தன் என்றும் எண்ணினார். ஆம்; அவை உண்மைதான். ஆனால் தேவனோ நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் (தானி.5:27) என்று அவரிடம் கூறினார். அன்று இராத்திரியிலே அவர் கொலை செய்யப்பட்டார். உலகத்தின் தராசை வைத்து உங்கள் வாழ்வை எடை போடாதீர்கள்; தேவனுடைய தராசை வைத்து உங்கள் வாழ்வை சீர்தூக்கிப் பாருங்கள். கிறிஸ்துவை முதலாவது நாம் வைத்தால் அவரையும் நமக்குத் தேவையான யாவற்றையும் நாம் பெற்றுக்கொள்வது அதிக நிச்சயம்!

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத்.6:33).

மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை

வாசகர்கள் பேசுகிறார்கள் (செப்டம்பர் – அக்டோபர் 2023)

1

கிறிஸ்துவுக்குள் அன்பான சத்தியவசன ஊழியர்களுக்கு, வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். சத்தியவசன வெளியீடு அனுதினமும் கிறிஸ்துவுடன் மே-ஜுன் 2023 தியானங்களை வாசித்தேன். அதிக பிரயோஜனமாக இருந்தது. ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்.

Mr.Antony, Vembakottai.

2

Dear Brother in Christ, I am feeling so much happy in thankful for your blessed and very excellent in so valuable all your posters. (whatsapp). Congrats.

Mr.Antony.

3

Dear Brother/Sister in Christ, Receiving the Magazines regularly and learning many things and growing in spiritual maturity. Praise be to God! Thanks a lot.

Sis.T.Vasuki Celin, Vellore.

4

Dear Brother in Christ, Every day Anuthinamum Christhuvudan Devotions very useful for our family prayer. May God bless this Ministry.

Sis.Sornakumari.

5

Beloved Brother in Christ, Greetings in Jesus Name. I am getting your Magazine, Anuthinamum Christhuvudan regularly and also in time. Your Magazine is of very useful to me for my spiritual life. May God be with you and bless you.

Bro.Mathews, Vellore.

சத்திய வசனம் (மே – ஜுன் 2023)