சத்தியவசன இணைய தளத்திற்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துதல் கூறி உங்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்த இணையதளத்தின் வாயிலாக உங்களுக்கு சேவை செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். சத்தியவசன ஊழியமானது வெகுஜன தொடர்பு ஊழியமாகும் தமிழில் இந்த வெப்சைட்டில் இடம் பெற்றுள்ள எமது ஊழிய ஸ்தாபனத்தைப் பற்றிய தகவல்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் பிரயோஜனமாயிருக்கும் என நம்புகிறோம். மேலும் இதில் இடம் பெற்றுள்ள ஆவிக்குரிய செய்திகள் மற்றும் தியானங்கள் நீங்கள் ஆவிக்குரிய வாழ்வில் பெலமடையவும் ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கவும் உதவியாயிருக்கும். இதன் மூலம் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களையும் உங்கள் மேலான கருத்துக்களையும் எங்களுக்குத் தெரிவியுங்கள். உங்கள் ஜெபக்குறிப்புக்களையும் ஆவிக்குரிய தேவைகளையும் எங்களிடம் தெரிவிக்கலாம். உங்களுக்காக ஜெபிக்கவும் உங்களுக்கு ஆலோசனை அளிக்கவும் ஆயத்தமாயிருக்கிறோம். இந்த வெப்சைட்டிற்கு வருகைதரும் போது நீங்கள் எங்கள் நண்பர்களாகிறீர்கள். மேலும் நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவினுடனான உறவிலே நீங்கள் மகிழ்ந்திருக்கவும் அதில் நிலைத்திருக்கவும் அதற்கு நாங்கள் உதவவும் விரும்புகிறோம்.

It is a pleasure to serve you. We trust that the information and available material in Tamil language will be blessing to you, your family and friends. Sathiya Vasanam Ministry is a Unit of The Good News Broadcasting Society. It is a media ministry and we seek to touch lives with the blessing of God’s Word. You will find interesting information that will enrich you spiritual walk with the Lord Jesus and you can begin a closer walk with the Lord through the study of His Word. We welcome you to respond with any need or prayer request you may have. We are available to help you as best as we can and pray for you and your needs. When you log on to our website, you become our friend and we want to do all we can to make your relationship with Jesus Christ enjoyable and fulfilling. Thank you for choosing to log on to www.sathiyavasanam.in

ஜெபக்குறிப்பு: 2026 மார்ச் 8 ஞாயிறு

பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக … எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார் (பிலி.2:11) அனைத்து திருச்சபை ஆராதனைகளிலும் போட்டி பொறாமைகளின்றி ஒருமித்து அவருடைய சிறந்த நாமத்தை உயர்த்தவும், லெந்து நாட்களின் சிறப்பு கூட்டங்களின் பலனாக சபை மக்கள் ஆவிக்குரிய வாழ்வில் புதுப்பிக்கப்படவும் ஜெபிப்போம்.

புகழ்ச்சியே சோதனை

தியானம்: 2026 மார்ச் 8 ஞாயிறு | வேத வாசிப்பு: 1சாமுவேல் 18:1-15

YouTube video

வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை (நீதி. 27:21).

தேவனுடைய அழைப்பைப் பெற்று ஊழியத்துக்காக வருகின்ற அநேகர், பின்பு புகழ்ச்சியை விரும்பி, புகழ்ச்சிக்குப் பின்பாக ஓடி அழிந்துபோகிறதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இன்று புகழ்ச்சியே மனிதனுக்குப் பெரும் சோதனையாகிறது என்பதே உண்மை.

இஸ்ரவேலருக்கு எதிராக வந்து நின்று அறைகூவல் விடுத்த கோலியாத் என்னும் பெலிஸ்தனை எதிர்கொண்டு போர் செய்ய யாருக்குமே துணிவிருக்கவில்லை. ராஜாவாகிய சவுல் முதற்கொண்டு இஸ்ரவேலர் யாவருமே அவனது தோற்றத்தையும், அவனது சவாலையும் எதிர்கொள்ள முடியாமல் நடுங்கிய வண்ணம் இருந்தார்கள். தற்செயலாக அங்கு வந்த தாவீது, சேனைகளின் கர்த்தரின் நாமத்தை நிந்திப்பதற்கு இவன் யார் என்று சொல்லி, கோலியாத்தை எதிர்கொண்டு வெற்றியும் கண்டான்; எல்லாருடைய பாராட்டுதலையும் பெற்றுக்கொண்டான். உடனடியாக சவுலும்கூட அவனைப் பாராட்டினான். பின்னர் ஸ்திரீகள், “சவுல் கொன்றது ஆயிரம்; தாவீது கொன்றதோ பதினாயிரம்” என்று பாடியபோது. தாவீதுக்குப் புகழ்ச்சி போகிறதே என்று எண்ணிய ராஜாவாகிய சவுலுக்கு மிகுந்த எரிச்சலும், பொறாமையும் உண்டானது. அன்று முதல் தாவீதை எரிச்சலுடன் சவுல் பார்த்தான். தனது புகழ்ச்சியை இப்போது தாவீது எடுத்துக்கொண்டான் என்று சவுல், தாவீதுமீது கோபப்பட்டான். அதனால் தேவனுடைய அபிஷேகத்தையும் இழந்துபோனான், கர்த்தரின் ஆவியானவர் சவுலை விட்டு விலகினார். பொல்லாத ஆவி சவுலுக்குள் வந்தது என்று காண்கிறோம்.

இன்று நம்முடைய வாழ்விலும் புகழ்ச்சியே நமக்குச் சோதனையாக அமைந்து விடுகிறது. நாம் புகழ்ச்சியைத் தேடி ஓட வேண்டியதில்லை. தேவனுடைய நாமத்தின் புகழ்ச்சிக்காகவே நாம் வாழவேண்டும். ஆண்டவர் இயேசு இவ்வுலகில் வாழ்ந்தபோது அவர் புகழ்ச்சியைத் தேடி ஓடவில்லை. எல்லாவற்றிற்கும் தேவனையே மகிமைப்படுத்தி வாழ்ந்தார். நாமும் அதுபோலவே வாழக் கற்றுக்கொள்வோம். புகழ்ச்சியைத் தேடி ஓடும்போது, மற்றவர்கள்மேல் அது பொறாமையையும், போட்டி மனப்பான்மையையும் தூண்டிவிடும். அதுவே நமது வாழ்வுக்கு பெரிதான வீழ்ச்சியையும், அழிவையும் கொண்டுவந்துவிடும். ஜாக்கிரதையாய் இருப்போம். “எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது, உங்களுக்கு ஐயோ, அவர்கள் பிதாக்கள் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்” (லூக்.6:26) என்று ஆண்டவர் தாமே கூறியதைச் சிந்திப்போமாக.

ஜெபம்: அன்பின் கர்த்தாவே, மனுஷரின் புகழ்ச்சிகளில் நாங்கள் வஞ்சிக்கப்பட்டு அழிவை காணாதபடி உமது நாமத்தின் புகழ்ச்சிக்காகவே நாங்கள் வாழ உமது கிருபைகளைத் தாரும். ஆமென்.

ஆசிரியரிடமிருந்து… (மார்ச் – ஏப்ரல் 2026)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

“நம்முடைய பாவங்களையும் சாபங்களையும் சுமந்து தீர்த்த” இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இவ்விதழ் வாயிலாக தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். கிறிஸ்துவின் பாடுமரணங்களை அதிகமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்நாட்களில் இந்த தியானங்கள் அனைவருக்கும் அதிக ஆசீர்வாதமாக இருக்கும் என்றே கர்த்தருக்குள் விசுவாசிக்கிறோம். தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாத அனுபவங்களை கர்த்தர் நாம மகிமைக்காக எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். மற்றவர்களுக்கும் தியானபுத்தகத்தை அறிமுகப்படுத்துங்கள்.

நமது தேசத்துக்காகவும், மே மாதத்திற்குள்ளாக தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தொடர்ந்து ஜெபிப்போம். நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந் தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன் (எசேக்கி.22:30). திறப்பிலே நின்று தேசத்தில் கர்த்தருக்கு பயந்த ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடு சுபிட்சமடைய கருத்தாய் வேண்டுதல் செய்வோம்.

சத்தியவசன தொலைக்காட்சி, இலக்கியபணி வாயிலாகவும், இணையதளம், வாட்ஸ்அப், YouTube ஆகிய ஊடகங்கள் வாயிலாக அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறார்கள். இவ்வூழியத்தை ஜெபத்தோடு தாங்கிவரும் பங்காளர்கள் ஆதரவாளர்களை கர்த்தர்தாமே ஆசீர்வதிக்க ஜெபிக்கிறோம்.

மார்ச் 1-28 மற்றும் ஏப்ரல் 18 -30 ஆகிய நாட்களில் சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் லெந்து நாட்களுக்கான தியானங்களாகவும், கர்த்தருக்குப் பயப்படுதலைக் குறித்தும் எழுதியுள்ளார்கள். மார்ச் 29-31, ஏப்ரல் மாதம் 1-17 ஆகிய நாட்களில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றியும், பின்பு அநேக தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராக காண்பித்ததையும் தியானித்து எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளுக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆ.ஜான் துரை

நமது மேய்ப்பர்!

அதிகாலை வேளையில்… (மார்ச் – ஏப்ரல் 2026)
Dr.W.வாரன் வியர்ஸ்பி

வேதபகுதி: சங்கீதம் 23

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன் (சங்.23:1)
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார் (வெளி.7:17).

நாம் நன்கு அறிந்த இந்த வார்த்தைகளை தாவீது எழுதியபோது, அவர் தன்னைப் பற்றியும் இயேசுகிறிஸ்துவின்மேல் விசுவாசம் வைத்துள்ள அனைவரையும் பற்றி தைரியமாக அறிக்கை செய்தார்.

நாமும் “கர்த்தர் என் மேய்ப்பர்”; என்ற அறிக்கையை நேர்மையுடன் சொல்ல இயலுமா? நாம் வழிதவறி அலைந்தோம். அவனவன் தன்தன் வழியிலே நடந்தோம். ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார் (ஏசாயா 53:6). ஆனால், இயேசு நம்மைக் கண்டுபிடித்ததால் அவருடைய மந்தையின் ஆடுகளாயிருக்கிறோம். கிறிஸ்துவை நம்புவதற்கு முன்பு, “நாம் காணாமற்போயிருந்த ஆடுகள்.” “நம் அனைவரையும் தமது மந்தையின் ஒரு பகுதியாக மாற்றினார்.” அவர் மாத்திரமே நமது மேய்ப்பர். ஒரு சில கிறிஸ்தவர்களுக்கு தங்களை ‘ஆடுகள்’ என்று அழைப்பது சங்கடமாக உள்ளது. ஏனெனில், ஆடுகள் பாதுகாப்பற்றவை, அவைகளுக்குக் கண்பார்வை குறைவு, எனவே பாதை தெரியாது அலைந்து திரியும் வாய்ப்புகள் அதிகம். எனினும் வேதாகமம் நம்மை குதிரைகளுக்கோ, சிங்கங்களுக்கோ ஒப்பிடவில்லை. ஆடுகள் என்றே அழைக்கிறது. எனவே, நமக்கு ஒரு மேய்ப்பன் தேவை. “கர்த்தாவே, மனிதனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, தன் நடைகளை நடத்துவதும் அவன் அதிகாரத்தில் இல்லை” (எரே. 10:23). இந்த உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

இயேசு நம்முடைய மேய்ப்பராக இருந்தால் நாம் அவருடைய குரலை அறிந்துகொள்ள வேண்டும்; அது மாத்திரமல்ல, அவருக்கு செவிகொடுக்க வேண்டும். அவரது ஆடுகள் அவர் சத்தத்துக்கு செவி கொடுக்கின்றன என்று மூன்று முறை யோவான் 10ம் அதிகாரத்தில் (வச. 3,16,27) இயேசு கூறியுள்ளார். அது மாத்திரமல்ல, கிறிஸ்துவை மறுதலிக்கிறவர்களின் குரலையும் அவருடைய ஆடுகள் இனங்கண்டு கொள்வார்கள். பொய்யான போதகர்களின் குரல்களை அடையாளம் கண்டு அவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும் (வச.5). பாவங்கள் நிறைந்த உலகில் நல்லமேய்ப்பரின் குரல் அவருடைய ஆடுகளை வாழ்விக்கிறது. நல்லமேய்ப்பரின் குரல் என்பது தேவனுடைய வார்த்தையே. தேவனுடைய சத்தியத்தை அறிந்துகொள்ள பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவுகிறார் (1 யோவான் 4:1-6). உங்கள் மேய்ப்பரை அறிந்துகொள்ளுங்கள்; அவருடன் நேரத்தை செலவிடுங்கள், சத்தியத்தை தியானியுங்கள். அவருடைய வார்த்தையைப் படிப்பதால் மட்டுமே அவருடைய குரலை நாம் இனம் காணமுடியும் (எபே.4:21).

நல்லமேய்ப்பன் நம்மை போஷித்து, தம்முடைய வார்த்தையின்படி நம்மை வழிநடத்துகிறார். வேதத்தை வாசிப்பதை வழக்கமாகக் கொள்ளாமல் அதனை ஆராய்ந்து அறிந்து, அதன்படி நடக்கவேண்டும். அவருடைய சத்தத்தை அறிந்திருப்பதால் ஆடுகள் அவரைப் பின்பற்றுகின்றன (யோவான் 10:4) “திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்; (யாக். 1:22).” நாம் இயேசுவைப் பின்பற்றவேண்டும் என்பதை சங்கீதம் 23 அழகாகக் கூறுகிறது. அவ்வாறு இல்லையெனில் அவர் நமக்காக திட்டமிட்டுள்ள அனைத்தையும் இழக்கநேரிடும். பசுமையான புல்வெளிகள், தெளிவான நீரோடை, மந்தையின் கூட்டுறவு, இரவில் பாதுகாப்பு, நம்மை புத்துணர்ச்சியடையச் செய்யும் அபிஷேகம் மற்றும் இன்னும் பலவற்றை நமக்காக அவர் வைத்துள்ளார்.

அவர் நமது மேய்ப்பராக இருந்தால் அவருக்கு மந்தைகளாகிய நாம் பயனுள்ளவர்களாக இருக்கவேண்டும். மந்தைகள் பால், கம்பளி, இறைச்சி, ஆட்டுக்குட்டிகள் மற்றும் வருடாந்தர விருந்துகள் இவைகளால் மேய்ப்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் பயன்பட்டன. சிறப்பு வழிபாட்டிற்காக பலிகளாகவும் உதவின. யூத மேய்ப்பர் தங்கள் ஆடுகளை நோக்கமின்றி கொல்லவில்லை. ஏனெனில், ஆன்மா மிகவும் மதிப்புடையது. எனவே கர்த்தருக்குக் காணிக்கையாக தங்களிடமிருந்த சிறப்பானதைக் கொடுத்தார்கள். இறைவனின் பிள்ளைகளாகிய நாம் “ஜீவனுள்ள பலிகளாக இருக்கவேண்டும்; (ரோமர்12:1,2),” அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படியவேண்டும். நற்செய்தியை அறிவித்து மற்றவர்களை இரட்சகரிடம் கொண்டு வரவேண்டும். நம்மை அவருடைய ஆடுகளாக மாற்றியதற்கு அவர் செலுத்தின கிரயத்தை கருத்தில் கொண்டு, நம்முடைய அனைத்தையும், சிறந்ததையும் அவருக்குக் கொடுக்கவேண்டும்.

இறுதியாக நாம் அவருடைய ஆடுகளாக இருந்தால் மாத்திரமே, பரலோகத்திற்குச் செல்லமுடியும் என்பதை நாம் நன்கு அறிவோம். “நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்; (சங். 23:6).” “என் பிதாவின் வீட்டில் அநேக மாளிகைகள் உள்ளன. உங்களுக்காக ஓர் இடத்தை ஆயத்தம் பண்ண நான் செல்கிறேன்” (யோவான் 14:1-3) என்று இயேசு சொன்னார். நாம் பரலோகம் சென்றாலும் அங்கும் நமது மேய்ப்பர் நம்மை கவனித்துக்கொள்வார். கர்த்தர் நமது மேய்ப்பர் என்று நமது வாயினால் மாத்திரம் சொல்வது சரியல்ல. நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து சொல்ல வேண்டும். அவர் தம்முடைய இரத்தத்தால் அவருடைய ஜனங்களை வாங்கினதால் “என் ஆடுகள்” என்று அழைக்கிறார். நாமும் அவரை நம்புவதால் “நமது மேய்ப்பர்” என்று சொல்லுகிறோம்.

சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் (வெளி.7:17).

(மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை)

வேதாகமம் பற்பல மொழிகளில் எழுதப்பட்டன!

வேதாகமம் உருவானது எப்படி? (மார்ச் – ஏப்ரல் 2026)
Dr.உட்ரோ குரோல்

ஜெரோம் லத்தீன் வில்கேட் வேதாக மத்தை மொழிபெயர்த்தவர். இன்று உலகெங்கும் உள்ள ரோமர் கத்தோலிக்கர்களால் பயன்படுத்தப்படும் வேதாகமம் இதுவே. இவர் தள்ளுபடியாகம நூல்களை வேதாகமத்துடன் சேர்க்கக்கூடாது. அவற்றுக்கு அதற்குத் தகுதியில்லை என்றார். ஆனால், ரோமாபுரியில் இருந்த ரோமர் கத்தோலிக்க பிஷப்புகள் தள்ளுபடியாகம நூல்களை வேதாகமத்துடன் சேர்க்கவேண்டும் என்று கூறினார்.

கி.பி.முதல் நான்கு நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்ட வேதாகம நூல்களுடன் இந்தத் தள்ளுபடியாகம நூல்கள் சேர்க்கப்படவில்லை.

1546இல் டிரெண்டில் நடந்த ரோமன் கத்தோலிக்கர்களின் மாநாட்டில், இந்தத் தள்ளுபடியாகம நூல்கள் வேதாகம நூல்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. எனவே, அவர்களுக்காக அச்சிடப்பட்ட வேதாகமங்களில் பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் நடுவே இந்தத் தள்ளுபடியாகம நூல்கள் சேர்க்கப் பட்டிருப்பதைக் காணலாம். இந்த வேதாகமத்தைச் சீர்திருத்த மரபினரோ, வேறு சபைப்பிரிவினரோ ஏற்றுக்கொள்வதில்லை.

66 புத்தகங்கள் புனித நூல்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டன. இவையனைத் தும் ஆதித்திருச்சபையினரால் தேவனுடைய ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டுள்ளவை என அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த 66 புனித நூல்களும் நாம் வேதாகமம் என்று அழைக்கும் நூலகத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.

பழைய ஏற்பாட்டு நூல்கள் யாவும் கி.மு நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டன. புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்தும் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டன.

கி.பி.397 இல் கார்த்தேஜ் என்னும் இடத்தில் நடைபெற்ற மூன்றாம் கிறிஸ்தவ மாநாட்டில் 27 புதிய ஏற்பாட்டு நூல்களும் புனிதமானவை, வேதாகமத்தில் சேர்த்துக்கொள்ளத் தகுதியானவை என்று முடிவு செய்யப்பட்டது. அந்த நூற்றாண்டிலேயே வேதாகமத்தில் சேர்க்கப்பட வேண்டிய 66 பரிசுத்த நூல்களும் தெரிந்தெடுக்கப்பட்டு முடிக்கப்பட்டன. அந்த நாள் முதல் வேதாகமத்தில் எதுவும் கூட்டப்படவும் இல்லை, குறைக்கப்படவும் இல்லை.

நாம் ஒரு காரியத்தை நினைவுகூர வேண்டும்.

வேதாகமம் அதிகாரபூர்வமான ஒரு புத்தகத் தொகுதி அல்ல.

வேதாகமம் அதிகாரபூர்வமான புத்தகங்களின் ஒரு தொகுதியாகும்.

வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது என்று மனிதர் சொல்லுவதால் அது அப்படி ஆக்கப்பட்டதல்ல. வேதாகமம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் அப்படிக் கூறுகிறார்கள்.

கார்த்தேஜில் நடந்த மூன்றாவது உலகமாநாட்டில் 27 புதிய ஏற்பாட்டு நூல்களையும், தேவ ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை என்று தீர்மானித்தார்கள். அங்கீகரித்தார்கள். அதனால்தான் அந்த 27 புத்தகங்களும் தேவ ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை. இதை எந்த மாநாடு கூடி அங்கீகரித்தாலும், அங்கீகரிக்காவிட்டாலும் அவை அப்படியே இருக்கும். அவற்றுக்கு மனிதனுடைய சான்றிதழ் தேவையில்லை. ஆவியினால் தூண்டப்பட்டதால் தான் கார்த்தேஜில் நடந்த மூன்றாவது உலக மாநாட்டினர் இந்த 27 புத்தகங்களும் ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை என்று கூறினர்.

கர்த்தருடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமத்தை நாம் முழு நம்பிக்கையுடன் வாசிக்கலாம். நாம் அதில் தேவனுடைய உள்ளத்தை வாசிக்கிறோம். தேவனுடைய உள்ளமும், சித்தமும் மனுக்குலத்துக்கு வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

கற்பனை செய்து பாருங்கள்! உங்களுக்கு தேவனுடைய வார்த்தை நேரடியாகக் கிடைக்கிறது. தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறீர்கள். தேவனுடைய சத்தத்தைக் கேட்கிறீர்கள். தேவன் தம் வசனத்தின் மூலம் உங்களுடனே பேசுகிறார்.

பயப்படாதே! நான் உன்னுடனே இருக்கிறேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.

இவை யார் கூறியது?

உங்களுடைய தலையில், மூளையில் இதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் இருதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் அதைச் செயல்படுத்திக் காட்டுங்கள். உலகமெங்கும் அதை விதைப்பாயாக!

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்

வாசகர்கள் பேசுகிறார்கள் (மார்ச் – ஏப்ரல் 2026)

1

I am one of the beneficiaries among thousands being blessed by reading the daily devotion book – Anuthinamum Christhuvudan and the other Magazine. The devotions are thought provoking, helping us/me to reflect my daily walk with God this age of 86. The two sisters Shanthi Ponnu and Darshini Xavier have profound knowledge in the Word of God and quite strong in the theological understanding of our Bible. Kindly convey my sincere thanks and prayers to both. May the Lord, whom we serve, bless you all to be a great blessing to the church & the Nation.

Rev.Dr.Jebaraj Samuel, Chennai.

சத்திய வசனம் (நவம்பர் – டிசம்பர் 2025)