வேதாகமம் பற்பல மொழிகளில் எழுதப்பட்டன!
வேதாகமம் உருவானது எப்படி? (மார்ச் – ஏப்ரல் 2026)
Dr.உட்ரோ குரோல்
ஜெரோம் லத்தீன் வில்கேட் வேதாக மத்தை மொழிபெயர்த்தவர். இன்று உலகெங்கும் உள்ள ரோமர் கத்தோலிக்கர்களால் பயன்படுத்தப்படும் வேதாகமம் இதுவே. இவர் தள்ளுபடியாகம நூல்களை வேதாகமத்துடன் சேர்க்கக்கூடாது. அவற்றுக்கு அதற்குத் தகுதியில்லை என்றார். ஆனால், ரோமாபுரியில் இருந்த ரோமர் கத்தோலிக்க பிஷப்புகள் தள்ளுபடியாகம நூல்களை வேதாகமத்துடன் சேர்க்கவேண்டும் என்று கூறினார்.
கி.பி.முதல் நான்கு நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்ட வேதாகம நூல்களுடன் இந்தத் தள்ளுபடியாகம நூல்கள் சேர்க்கப்படவில்லை.
1546இல் டிரெண்டில் நடந்த ரோமன் கத்தோலிக்கர்களின் மாநாட்டில், இந்தத் தள்ளுபடியாகம நூல்கள் வேதாகம நூல்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. எனவே, அவர்களுக்காக அச்சிடப்பட்ட வேதாகமங்களில் பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் நடுவே இந்தத் தள்ளுபடியாகம நூல்கள் சேர்க்கப் பட்டிருப்பதைக் காணலாம். இந்த வேதாகமத்தைச் சீர்திருத்த மரபினரோ, வேறு சபைப்பிரிவினரோ ஏற்றுக்கொள்வதில்லை.
66 புத்தகங்கள் புனித நூல்களாகத் தெரிந்தெடுக்கப்பட்டன. இவையனைத் தும் ஆதித்திருச்சபையினரால் தேவனுடைய ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டுள்ளவை என அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த 66 புனித நூல்களும் நாம் வேதாகமம் என்று அழைக்கும் நூலகத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.
பழைய ஏற்பாட்டு நூல்கள் யாவும் கி.மு நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டன. புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்தும் முதல் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டன.
கி.பி.397 இல் கார்த்தேஜ் என்னும் இடத்தில் நடைபெற்ற மூன்றாம் கிறிஸ்தவ மாநாட்டில் 27 புதிய ஏற்பாட்டு நூல்களும் புனிதமானவை, வேதாகமத்தில் சேர்த்துக்கொள்ளத் தகுதியானவை என்று முடிவு செய்யப்பட்டது. அந்த நூற்றாண்டிலேயே வேதாகமத்தில் சேர்க்கப்பட வேண்டிய 66 பரிசுத்த நூல்களும் தெரிந்தெடுக்கப்பட்டு முடிக்கப்பட்டன. அந்த நாள் முதல் வேதாகமத்தில் எதுவும் கூட்டப்படவும் இல்லை, குறைக்கப்படவும் இல்லை.
நாம் ஒரு காரியத்தை நினைவுகூர வேண்டும்.
வேதாகமம் அதிகாரபூர்வமான ஒரு புத்தகத் தொகுதி அல்ல.
வேதாகமம் அதிகாரபூர்வமான புத்தகங்களின் ஒரு தொகுதியாகும்.
வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது என்று மனிதர் சொல்லுவதால் அது அப்படி ஆக்கப்பட்டதல்ல. வேதாகமம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் அப்படிக் கூறுகிறார்கள்.
கார்த்தேஜில் நடந்த மூன்றாவது உலகமாநாட்டில் 27 புதிய ஏற்பாட்டு நூல்களையும், தேவ ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை என்று தீர்மானித்தார்கள். அங்கீகரித்தார்கள். அதனால்தான் அந்த 27 புத்தகங்களும் தேவ ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை. இதை எந்த மாநாடு கூடி அங்கீகரித்தாலும், அங்கீகரிக்காவிட்டாலும் அவை அப்படியே இருக்கும். அவற்றுக்கு மனிதனுடைய சான்றிதழ் தேவையில்லை. ஆவியினால் தூண்டப்பட்டதால் தான் கார்த்தேஜில் நடந்த மூன்றாவது உலக மாநாட்டினர் இந்த 27 புத்தகங்களும் ஆவியினால் தூண்டப்பட்டு எழுதப்பட்டவை என்று கூறினர்.
கர்த்தருடைய வார்த்தைகள் அடங்கிய வேதாகமத்தை நாம் முழு நம்பிக்கையுடன் வாசிக்கலாம். நாம் அதில் தேவனுடைய உள்ளத்தை வாசிக்கிறோம். தேவனுடைய உள்ளமும், சித்தமும் மனுக்குலத்துக்கு வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
கற்பனை செய்து பாருங்கள்! உங்களுக்கு தேவனுடைய வார்த்தை நேரடியாகக் கிடைக்கிறது. தேவனுடைய வார்த்தையை வாசிக்கிறீர்கள். தேவனுடைய சத்தத்தைக் கேட்கிறீர்கள். தேவன் தம் வசனத்தின் மூலம் உங்களுடனே பேசுகிறார்.
பயப்படாதே! நான் உன்னுடனே இருக்கிறேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.
இவை யார் கூறியது?
உங்களுடைய தலையில், மூளையில் இதை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் இருதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் அதைச் செயல்படுத்திக் காட்டுங்கள். உலகமெங்கும் அதை விதைப்பாயாக!
(தொடரும்)
மொழியாக்கம்: ஜி.வில்சன்