ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 30 ஞாயிறு

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது (ஏசா. 6:31) இந்த ஆராதனைநாளில் சபைகளுக்குள் காணப்படும் குளறுபடிகள், பிரிவினைகள், கசப்புகள், ஏற்றத்தாழ்வுகள் இவை எல்லாம் முழுவதுமாக அகற்றப்படவும், சபைகள் சமாதானம் பெற்று பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருக வேண்டுதல் செய்வோம்.

ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 29 சனி

பங்காளர் குடும்பங்களிலே வெளியே சொல்லமுடியாத துக்கம், கீழ்ப்படியாத பிள்ளைகளைக் குறித்த பாரம், இடம் மற்றும் சொத்து பிரச்சனை, வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம், தங்களது சரீரத்தில் ஏற்பட்ட பெலவீனங்களினாலே சோர்ந்துபோய் மனஅழுத்தத்தில் காணப்படும் சகோதர, சகோதரிகளை சர்வவல்லமையுள்ள தேவன் தேற்றி அவர்களை வழிநடத்த ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 28 வெள்ளி

போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடுகளுக்குள் காணப்படும் பரஸ்பர பகைமைகள் நீங்கவும் சமாதான உடன்படிக்கை ஏற்படுவதற்கும், ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய போர் நிறுத்தப்பட்டு மக்கள் பயமில்லாமல் வாழ்ந்திருக்கவும், சமாதானத்தின் தேவன்தாமே தேசத்து அதிபர்களோடு பேசி கிருபை செய்திட ஜெபம் செய்வோம்.

ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 27 வியாழன்

பங்காளர் குடும்பங்களிலே கடன் பாரத்தோடு உள்ள நபர்களுக்கு இளைப்பாறுதல் தருகிற ஆண்டவர்தாமே மனமிரங்கி அந்த கடன் சுமையிலிருந்து வெளிவர உதவி செய்யவும், செய்தித்தாளில் பார்க்கிறதுபோல கடன் வாங்கி செலுத்தமுடியாமல் மனஅழுத்தத்திற்குள்ளாகி தாங்களே வாழ்வை முடித்துக்கொள்கிற சம்பவங்கள் இனியும் நடைபெறாதபடி, கர்த்தர் அவர்களை இரட்சிக்க ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 26 புதன்

சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால் எனக்கு ஐயோ (1கொரி.9:16) அருட்பணியாளர்களால் ஆரம்பிக்கப்பட்டு வடமாநிலங்களில் நடைபெற்றுவரும் அனைத்து மிஷனரிபணிகளுக்காகவும், மிஷனரி ஸ்தாபன தலைவர்களுக்காகவும், மிஷனரிகளை தாங்கிவரும் விசுவாச குடும்பத்தார்களை கர்த்தர் அபரிமிதமாக ஆசீர்வதிப்பதற்கும் ஜெபிப்போம்.

ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 25 செவ்வாய்

அனைத்து நீதிமன்றங்களுக்காக ஜெபிப்போம். தனிநபர், சமூகம், அரசுக்கு இடையேயான சட்டப்பிரச்சனைகளை விசாரித்து இருதரப்புக்கும் நியாயமான தீர்ப்பு வழங்குவதில், நீதிபதிகளுக்கு வேண்டிய நல்ல பாதுகாப்பிற்காகவும், அனைத்து சிக்கலான வழக்குகளை நியாயம் தீர்ப்பதற்கு வேண்டிய விசேஷித்த ஞானத்தை கர்த்தர் தந்தருளவும் மன்றாடுவோம்.