ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 2 சனி

நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து .. கீர்த்தனம் பண்ணுவேன் (சங்.7:17) ஆபத்து வேளையிலும் இக்கட்டு வியாதியின் நேரத்திலும் தேவனுடைய சமுகத்தில் மன்றாடின ஜெபங்களுக்கு ஆண்டவர்தாமே கிருபையாய் இரங்கி அளித்த நல்ல பதில்களுக்காகவும், அருளிச்செய்த நன்மையான ஈவுகளுக்காகவும் கர்த்தரைப் பாடி துதித்து மகிமைப்படுத்துவோம்.