ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 5 செவ்வாய்
அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது (சங்.66:7) மணிப்பூர் மாநிலத்தின்மேல் கர்த்தர் கண்ணோக்கமாயிருந்து தம்முடைய வல்லமையையும் நீதியையும் அங்கு வெளிப்படுத்தவும் தம்முடைய ஜனங்களுக்கு துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு சரியாய் நன்மையை சரிக்கட்டவும் வேண்டுதல் செய்வோம்.