ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 15 வெள்ளி
இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களுக்காக ஜெபிப்போம். ஊழியர்கள் அனைவரின் நல்ல சுகத்திற்காகவும் ஊழியத் தேவைகளை கர்த்தர் சந்திப்பதற்கும், அந்த தேசத்தின் பொருளாதார மேம்பாட்டிற்காக தேசத்தில் எடுக்கப்படும் சகல பிரயாசங்களையும் கர்த்தர் ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.