ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 29 ஞாயிறு

இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள் (2இராஜா. 7:9) கர்த்தருடைய நாளில் கர்த்தரைத் தொழுதுகொண்டு அந்த நற்செய்தியை கிராமங்களிலும் சுற்றுவட்டாரங்களிலும் அறிவிக்கும்படியாக ஊழியர்கள் எழும்பவும், அவர்களது பாதுகாப்புக்காக சபையாக கூடி ஜெபிக்கும் ஜெபக்குழுக்கள் உருவாக ஜெபிப்போம். நற்செய்தி கூட்டங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் கூட்டங்கள் தடையின்றி நடத்தப் படுவதற்கும் சத்துருவின் வல்லமை முறியடிக்கப்படவும் ஜெபிப்போம்.