ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 30 புதன்

நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே (எபி.13:5) என்று வாக்குப்பண்ணின தேவன் தாம் சொல்லியபடியே இம்மாதம் முழுவதும் நம் கரங்களைப் பிடித்து வழுவாதபடி நம்மை நடத்தினார். இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி அவரைத் துதிப்போம்.

நீங்கள் சொஸ்மடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக்கோபு 5:16).