ஜெபக்குறிப்பு: 2025 ஏப்ரல் 28 திங்கள்

நீலகிரி மாவட்டத்தின் இரட்சிப்புக்காக ஜெபிப்போம். மூடப்பழக்கங்களுக்கும், மந்திர வல்லமைகளுக்கும் அடிமைப்பட்டுள்ள ஆதிவாசி மக்களின் ஆத்தும இரட்சிப்புக்காகவும், அங்குள்ள திருச்சபை ஊழியங்களினாலே கிராமங்கள் சந்திக்கப்படவும், மலை மாவட்டத்தின் இயற்கைகள் சேதப்படுத்தப்படாதவாறு பாதுகாக்கப்படுவதற்கும் ஜெபிப்போம்.