ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 15 ஞாயிறு
கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது (சங்.11:4) இந்தநாளில் அனைத்து திருச்சபைகளில் நடைபெறும் சிறுவர் ஊழியங்கள், வாலிபர் ஊழியங்களிலே பிள்ளைகள் உற்சாகத்தோடு பங்கு பெறுவதற்கும், வசனமாகிய விதைகள் அவர்கள் இருதயமாகிய நல்ல நிலத்தில் விழுந்து கனிதரும் செடியாக அவைகள் வளர, அவர்களது பரிசுத்த வாழ்க்கை பாதுகாக்கப்பட ஜெபிப்போம்.