ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 10 புதன்
அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்தார்கள் (அப்.2:46) இன்று சத்தியவசன அலுவலகத்தில் நடைபெறும் ஜெபக்கூட்டத்தை கர்த்தர் ஆசீர்வதித்து, ஏறெடுக்கப்படும் எல்லா விண்ணப்பங்களுக்கும் மறுஉத்தரவுகளை நன்மையாகவும் ஆசீர்வாதமாகவும் கர்த்தர் தந்தருளவும், கர்த்தரின் செய்தியை கொண்டுவரும் ஊழியரை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.