ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 19 வெள்ளி
ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே தென் காக்கசு மலைப் பகுதியில் அமைந்துள்ள அசர்பைசானில் கிறிஸ்தவர்கள் கூடி ஆராதிக்க சட்டப்படி முறையான பதிவு தேவை. ஆனால் பதிவுக்கு தடைகள் காணப்படுகிறது. பதிவுசெய்யப்படாத ஜெபக்குழுக்களுக்கு அபராதம்,கைது, சோதனை என பல பிரச்சனைகளை சந்தித்து பாதுகாப்பின்றி உள்ளது. இந்த தடைகளெல்லாம் நீங்கவும் விடுதலையோடு ஆராதிப்பதற்கும் ஜெபிப்போம்.