ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 30 சனி
ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது (சங்.136:4) இம்மாதத்தில் நாம் நடந்து வந்த வழிகளில் எல்லாம் நமது துணையாளராக, நமக்கு பரிகாரியாக, நம்மை ஆறுதல்படுத்துகிறவராக, தேற்றுகிறவராக அருகிலே நிழலாய் இருந்து பாதுகாத்த வந்த கர்த்தாதி கர்த்தரை ஸ்தோத்திரித்து ஜெபிப்போம்.
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள் என்று சொல்லி … அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது (லூக்.22:40,44).