ஜெபக்குறிப்பு: 2024 செப்டம்பர் 30 திங்கள்

கர்த்தர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள் (சங்.105:6) இம்மாதம் முழுவதும் நாம் சந்தித்த எவ்வளவோ கஷ்ட, நஷ்ட, வேதனையான சூழ்நிலைகள் மத்தியிலும் கர்த்தர் நமக்கு வாக்குப்பண்ணி அற்புதமாக, குறைவில்லாமல் நடத்தினபடியால் முழுமனதோடு நன்றி செலுத்தி ஜெபிப்போம்.

நம்முடைய பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப் போல சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார் (எபிரெயர் 4: 15).