ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 1 வெள்ளி
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது (1பேது.3:12).
உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது (சங்.40:11) என்ற வாக்குப்படி இந்த பதினொராவது மாதத்தில் தேவனுடைய நன்மையும் கிருபையும் நம்மைத் தொடர்ந்து வரவும், அவர் தமது கிருபையின்படியும், வார்த்தையின்படியும் நம்மை உயிர்ப்பிக்க, வழிநடத்த அர்ப்பணித்து ஜெபிப்போம்.