ஜெபக்குறிப்பு: 2024 நவம்பர் 30 சனி

கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக (சங்.18:46) கர்த்தர் கன்மலை நிழலாயிருந்து இம்மாதம் முழுவதும் நம்மை நடத்தினார். சோர்வுகள், பயங்கள், கலக்கங்கள் வந்தபோதும் அவற்றில் அமிழ்ந்துவிடாமல் ஜெயகிறிஸ்து நமக்கு முன்பாக சென்று வெற்றி சிறக்கச் செய்த கிருபைகளுக்காய் துதிசெலுத்தி ஜெபிப்போம்.

குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய்சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை (ஆபகூக் 2: 3).