ஜெபக்குறிப்பு: 2025 ஜனவரி 30 வியாழன்

உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன் (சங்.119:101) கர்த்தருடைய வார்த்தைகளை அனுதினமும் வாசித்து அதன்படி நடப்பதற்கு தீர்மானம் பண்ணின நாம் அந்த தீர்மானத்தில் முடிவுபரியந்தம் நிலைத்திருப்பதற்கு கர்த்தர் கிருபை செய்ய வேண்டுமென்று அவருடைய சமுகத்தில் நம்மைத் தாழ்த்தி ஜெபிப்போம்.