ஆசிரியரிடமிருந்து… (மார்ச் – ஏப்ரல் 2025)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். இவ்விதழ் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். இவ்வூழியத்தின் வாயிலாக தேவன் செய்துவரும் மகத்துவமான காரியங்களுக்காக தேவனைத் துதிக்கிறோம். இவ்வூழியத்தை காணிக்கையாலும் ஜெபத்தினாலும் தாங்கும் அன்பர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

ஓராண்டிற்குள் வேதாகமத்தை வாசிப்பதற்கான அட்டவணைப்படி 2024ஆம் ஆண்டு வேதாகமத்தை வாசித்து முடித்தவர்களின் பெயர்களை இவ்விதழில் பிரசுரித்துள்ளோம். இவ்வாண்டிலும் இன்னும் அநேகர் வேதாகமத்தை வாசிக்க உற்சாகப் படுத்துகிறோம். சத்தியவசன தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாரத்தில் மூன்று நாட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அநேகமாயிரமான மக்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து சத்தியங்களை கேட்டு ஆவிக்குரிய வாழ்க்கையில் பயனடைந்து வருகின்றனர். தாங்களும் குடும்பமாக நிகழ்ச்சியில் பங்கெடுத்து ஆசீர்வாதமடையுங்கள். தொலைகாட்சி நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சி நிரல் உள்ளே இடம்பெற்றுள்ளது. சத்தியவசன தொலைக் காட்சி ஆதரவாளர்கள் திட்டத்தில் இணைந்து இவ்வூழியத்தைத் தாங்க உங்களை அன்பாய் அழைக்கிறோம். YouTube சேனலில் வெளிவரும் Audio version அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களையும் குடும்பமாக கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள். இதற்கான Link தேவைப்படுவோர் எங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

வேதாகம அடிப்படைகள் (Bible Basics) என்ற தலைப்பில் Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதிய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த ஆராய்ச்சி செய்திகள் தொடராக பிரசுரித்து வருகிறோம். அதை வாசித்து ஆசீர்வாதமடையுங்கள். லெந்துநாட்களுக்கான சிறப்பு செய்திகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. மார்ச் மாதத்தில் 5-18 நாட்களுக்கு தியானங்களை சகோதரி ஜெபி பீடில் அவர்களும் 19-31 ஆகிய நாட்களுககு சகோ.தர்மகுல சிங்கம் அவர்களும் எழுதியுள்ளார்கள். ஏப்ரல் மாதத்தில் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் கிறிஸ்துவின் பாடு மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் தெரிந்தெடுப்புகளை குறித்தும் எழுதியுள்ளார்கள். இத்தியானங்கள் நமது ஆவிக்குரிய வாழ்விற்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்