ஜெபக்குறிப்பு: 2025 மார்ச் 1 சனி

நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார் (சங்கீதம் 3:4).

நீ என் தாசன்: இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை (ஏசா.44:21) என்ற வாக்கினால் திடப்பட்டு புதிய மாதத்திற்குள் பிரவேசிப்போம். மறவாதநேசர் இம்மாதம் முழுவதும் நமது கரங்களைப் பிடித்து இடறாத செம்மையான வழியிலே நடத்தி தேவைகளைச் சந்திக்கும்படியாக நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.