ஜெபக்குறிப்பு: 2025 மே 1 வியாழன்

கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும். நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர் (சங். 86:6,7).

மற்றுமொரு புதிய மாதத்திற்குள் பிரவேசிக்க தேவன் நமக்கு அருளிய சிலாக்கியத்திற்காக துதிப்போம். நீ கையிட்டுச் செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும் கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார் (உபா.28:12) என்ற வாக்குப்படியே ஆண்டவர் தாமே நன்மைகளையும் பாதுகாப்பையும் தந்து வழிநடத்த ஜெபிப்போம்.