ஜெபக்குறிப்பு: 2025 மே 29 வியாழன்

அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி… (கொலோ.1:20) இந்த நாட்களில் கிறிஸ்தவ குடும்பங்களில் உள்ள பிரிவினைகள், சமாதானக் குலைச்சல்கள் நீங்கவும், வழக்குமன்றத்தில் உள்ள வழக்குகள் தீர்ந்து குடும்பங்கள் சமாதானம் அடையவும் உடைந்துபோன கிறிஸ்தவ குடும்பங்கள் ஒன்று சேரவும், சாட்சியுள்ள குடும்பங்களாய் காணப்படவும் பாரத்துடன் ஜெபிப்போம்.