ஜெபக்குறிப்பு: 2025 ஜுன் 30 திங்கள்
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை (புலம்பல் 3:22) உடைக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட எல்லா நேரங்களிலும் நேசர் தமது அன்பின் கரத்தால் அரவணைத்து, தமது கூடாரத்தில் நம்மை ஒளித்து பாதுகாத்து வந்த கிருபைகளை எண்ணி ஸ்தோத்திரபலியிட்டு துதிப்போம்.
ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள் என்றார் (லூக்கா 21 : 36).