ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 1 திங்கள்

கர்த்தாவே, நீரே என் பங்கு; … முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும் (சங். 119:57,58).

கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்குவார் (ஏசா.58:11) என்ற வாக்குப்படியே அன்றன்றுள்ள அப்பத்தைக் கொடுத்து, வறட்சிகளுக்கும் இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி இதுவரையிலும் நடத்தின தேவன் இந்த மாதத்தையும் ஆசீர்வாதமாய் நடத்தித்தர நம்மை ஒப்புவித்து ஜெபிப்போம்.