ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 7 ஞாயிறு
ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி அதை மகிமையாக எண்ணு (ஏசா.58:13) இன்று எல்லா இடங்களிலும் ஆசரிக் கப்படும் ஆராதனைகளில் பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளவும், எல்லா திருமண்டல பேராயர்களுக்காகவும், பேராயப் பணி களில் தேவபயத்தோடு ஊழியஞ்செய்யும் ஊழியர்களுக்காகவும் ஜெபிப்போம்.