ஜெபக்குறிப்பு: 2025 செப்டம்பர் 26 வெள்ளி
பூட்டானில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் பெரும்பாலும் அடையாள அட்டைகள், சொத்துப்பதிவு அல்லது வேலை விண்ணப்பங்கள் போன்ற அத்தியாவசிய ஆவணங்களைப் பெறுவதற்கு சிரமப்படுகிறார்கள். இது சமூக மற்றும் பொருளாதார பங்கேற்பைக் கடுமையாகத் தடுக்கிறது. இந்தப் பிரச்சனைகளிலிருந்து கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை விடுவிக்கவும் நெருங்கிய அண்டை நாடான பூட்டான் சந்திக்கப்பட ஜெபிப்போம்.