வாசகர்கள் பேசுகிறார்கள்
(மார்ச்-ஏப்ரல் 2017)
01. சத்தியவசன டிவி நிகழ்ச்சிகளுக்காகவும் உங்கள் ஊழியங்களுக்காகவும் சரீர பெலனுக்காகவும் தினமும் ஜெபிக்கிறோம். உங்கள் வேதவசன விளக்கம்யாவும் என் வாழ்வில் மாற்றத்தையும் ஆசீர்வாதத்தையும் தந்தது. தேவனுக்கே கோடி நன்றி!
Mr.S.Ravichandran, Ambur.
02. கடந்தவருடம் முழுவதும் கர்த்தர் அதிசயமாக நடத்தி வந்தார். டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட புயலில் மிகவும் அதிகமான காற்றடித்தபோதும் எங்கள் மாடியில் போட்ட ஷீட் அப்படியே இருந்தது. ஷீட் போய்விடுமளவுக்கு காற்று என்றாலும் கர்த்தர் காத்துக்கொண்டார். கடந்த வருடத்தில் வேதாகமத்தை படித்து முடிக்க கர்த்தர் கிருபை செய்தார்.
Mrs. Sarojini , Tiruvellore.
03. தங்களின் இதழ்களான அனுதினமும் கிறிஸ்துவுடன் மற்றும் சத்திய வசனம் மிகவும் பிரயோஜனமாக உள்ளன. 2016ஆம் ஆண்டு முழுவதும் கண்மணி போன்று காத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Sis.Nagavalli, Salem.
04. நாங்கள் அதிக நாட்களாக சத்தியவசன நிகழ்ச்சிகளைக் கேட்டு ஆசீர்வாதம் பெற்றுவருகிறோம். அது எங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு அதிக பயனுள்ளதாக இருக்கிறது.
Mrs.Prema George,Chennai.
05. கடந்த 3 ஆண்டுகளாக எங்களது சுகத்திற்காக ஜெபிக்கும்படி கடிதம் எழுதினோம். யாவருடைய ஜெபத்தினாலும் 10 ஆண்டுகளாக இருந்த சர்க்கரைநோய் சற்று குறைந்துள்ளது. எனது மனைவியின் சுகவீனத்திற்காகவும் ஜெபியுங்கள். சுகத்தைக் கொடுத்த ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.
Mr.Vijaya Kumar, Coimbatore.
06. அனுதினமும் கிறிஸ்துவுடன் முதல்பக்கத்தில் அதிகாலை வேளையில் “ஜெபமும் சமாதானமும்” என்ற தலைப்பில் Dr.உட்ரோகுரோல் ஐயா எழுதியதைப் படித்தேன். ‘நேற்றைய துன்பங்களால் இரவு முழுவதும் தூங்காமல் இருந்தீர்களானால் அதிகாலை வேளையில் அவற்றை தேவனிடம் ஒப்படையுங்கள். அவர் உங்கள் கவலைகளை மாற்றி தம்முடைய சமாதானத்தால் நிரப்புவார்’ என்று எழுதியதைப் படித்ததும் தேவன் என்னோடு பேசினார் என்பதை மட்டும் அறிந்து அழுதுவிட்டேன். என் தேவன் என்னோடு என் நிலை அறிந்து பேசினார் என்பதை சாட்சியாக எழுதுகிறேன்.
Mrs.Sundariammal, Madurai.
07. அனுதினமும் கிறிஸ்துவுடன் ஒரு மிகப் பெரிய ஆசீர்வாதப் பெட்டகம். அனுதின ஆசீர்வாதம், மன்னா, ஆறுதல், நம்பிக்கை, விசுவாசம் மொத்தத்தில் அது எனக்கு ஆண்டவர் கொடுத்த மாபெரும் கிருபை. சகோதரி சாந்தி பொன்னு முதற்கொண்டு தியானங்கள் எழுதும் அனைவரையும் ஆண்டவர் அதிகமதிகமாக ஆசீர்வதிப்பாராக. யாவருக்காகவும் ஜெபிக்கிறேன்.
Mrs.Nirmala Martin, Bangalore.