ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 29 திங்கள்

தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும் (சங்.69:13) சொல்லொண்ணாத துயரம், நிந்தை, அவமானம், சொத்து மற்றும் குடும்பபிரச்சனைகளின் நிமித்தம் போடப்பட்டுள்ள வழக்குகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளினாலே ஜெபித்துக்கொண்டிருக்கும் பங்காளர்களுக்கு கர்த்தர் தமது மிகுந்த கிருபையின்படியே இரங்க வேண்டுதல் செய்வோம்.