ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 30 செவ்வாய்

தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார் (சங்.103:13) இம்மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் கர்த்தர் தகப்பனைப்போல நம்மோடு பேசி நடத்தினார். ஆகையால் அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்பொழுதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம் (எபி.13:15).

அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை (எரேமி.30:19).