ஆசிரியரிடமிருந்து… (ஜூலை – ஆகஸ்டு 2026)
கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,
“அண்டசராசரங்களையும் படைத்து ஆண்டு நடத்திவருகிற தேவாதிதேவனின்” நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.
ஜூலை-ஆகஸ்டு தியானபுத்தகத்தின் வாயிலாக பங்காளர்கள் வாசகர்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. உலகநாடுகளுக்கிடையே அமைதி இல்லை. அரசியல் குழப்பங்கள், கொடிய நோய் பரவலுக்கான செய்திகள், கால சூழ்நிலைகளில் வேறுபட்ட நிலை இவைகளே அன்றாடம் நாம் கேள்விப்படுகிற செய்திகள். எசேக்கியேல் 9:4ஆம் வசனத்தில் நாம் வாசிக்கிறபடி இதுபோன்ற எல்லா காரியங்களுக்காகவும் மேலும் தேசத்தில் காணப்படும் அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சு விட்டெழுது திறப்பிலே நின்று ஜெபிக்கிறவர்களாக இருக்க நம்மை அர்ப்பணிப்போம். நம்மனைவரின் ஒருமனப்பட்ட ஜெபத்திற்கு நல்ல பலனை நாம் நிச்சயம் காண்போம்.
சத்தியவசன தொலைக்காட்சி, வாட்ஸ்அப், இணையதளம், YouTube ஊடகங்கள் மூலமாகவும் மாதாந்திர பத்திரிக்கை, இலக்கியபணி வாயிலாகவும் அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் வழிநடத்தப்பட்டு வருகிறார்கள். இவ்வூழியத்தை ஜெபத்தோடு தாங்கிவரும் பங்காளர்கள் ஆதரவாளர்களுக்கும் எங்கள் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.
இவ்விதழில் ஜூலை மாத தியானங்களில் கிறிஸ்துவை நமது வாழ்வில் பிரதிபலிப்பதைப் பற்றி பல்வேறு தலைப்புகளில் ஆழமான சத்தியங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதியுள்ளார்கள். ஆகஸ்டு மாதம் யோசுவா, நியாயாதிபதிகளின் புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்களை சகோதரி தர்ஷினி சேவியர் அவர்கள் எழுதியுள்ளார்கள். தியானங்களை எழுதும் சகோதர, சகோதரிகளை உங்கள் ஜெபங்களில் நினைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருநாளின் தியானங்களும் நமது ஆவிக்குரிய வாழ்விற்கு அதிக பிரயோஜனமுள்ளதாக இருக்க ஜெபிக்கிறோம்.
ஆ.ஜான் துரை