வேதாகமத்தில் எப்படிப் பல பதிப்புகள் நமக்குக் கிடைத்தன!

வேதாகமம் உருவானது எப்படி? (ஜூலை – ஆகஸ்டு 2026)
Dr.உட்ரோ குரோல்

5. கோடக்ஸ் அலெக்சான்டிரினஸ்

இந்தக் கையெழுத்துப் பிரதி, எகிப்தில் கி.பி.450 இல் நகல் எடுக்கப்பட்டது. 1708 இல் அலெக்சான்டிரியாவில் உள்ள கோத்திரப்பிதாவின் கைகளில் கிடைத்தது. பின்னர் இது 1757 இல் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் ஒப்படைக்கப்பட்டது. கிறிஸ்தவ திருச்சபையின் ஆரம்ப 500 வருஷங்களில் கிடைத்த மிக முக்கியமான வேதாகமத்தின் கையெழுத்துப் பிரதிகளில் சில இவை. 1200 வருடங்களாக லத்தீன் வல்கேட் வேதாகமம் கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப் பட்ட தரமான மொழியெர்ப்பாக இருந்தது.

இப்பொழுது நாம் கடந்த 500 வருடங்களாகச் செய்யப்பட்ட வேதாகம மொழி பெயர்ப்புகளைப் பார்ப்போம். முதலாவது ஜேம்ஸ் மன்னரின் பதிப்பு. இங்கிலாந்தின் அரசராய் இருந்த ஜேம்ஸ்-I க்கு, அப்போது மக்கள் பயன்படுத்தி வந்த ஜெனீவா வேதாகமம் பிடிக்கவில்லை. அது ஜான் கால்வினின் மைத்துனரான வில்லியம் விட்டிங்காம் என்பவரால் 1557 இல் ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் வைத்து மொழிபெயர்க்கப்பட்டது. அது ஜெனீவா வேதாகமம் என அழைக்கப்பட்டது. இந்த வேதாகமம்தான், ஜான் பனியன், வில்லியம் ஷேக்ஸ்பியர் என்பவர்கள் பயன்படுத்தியதாகும். அமெரிக்காவுக்கு யாத்திரீகர்களாக வந்த மதகுருக்கள் இந்த வேதாகமத்தைத்தான் கொண்டுவந்தார்கள். ஜேம்ஸ் மன்னருக்கு இது பிடிக்காததால், அவர் இன்னொரு மொழிபெயர்ப்புச் செய்யுமாறு கட்டளையிட்டார்.

வேதாகமத்தை நல்லமுறையில் ஆங்கிலத்தில் அரசரின் கட்டளைப்படி மொழிபெயர்ப்பதற்காக 1604 ஜூலை 22ஆம் நாள் 54 மொழிபெயர்ப்பாளர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஆறு குழுக்களாகப் பிரிந்து வேலை செய்தனர். இரண்டு குழுக்கள் வெஸ்ட் மினிஸ்டரிலும், இரண்டு குழுக்கள் கேம்பிரிட்ஜிலும், இரண்டு குழுக்கள் ஆக்ஸ்போர்டிலும் கூடி மொழி பெயர்ப்பு செய்தனர். அவர்கள் 35 வருடங்களுக்கு முன்பாக கான்டர் பரியின் ஆர்ச் பிஷப்பினால் மொழி பெயர்க்கப்பட்ட “பிஷப்பின் வேதாகமத்தையே” பின்பற்றினர். அவசியம் ஏற்பட்ட இடங்களில் மட்டும் மாற்றங்கள் செய்தனர். அவர்களுடைய வேலை மிகவும் கவனமாகத் திறமையாகச் செய்யப்பட்டது. மொழிபெயர்ப்பாளர்களின் பணி நன்கு மேற்பார்வையிடப்பட்டது. லத்தீன் வல்கேட் வேதாகம மொழிபெயர்ப்புக்குப் பின் ஜேம்ஸ் மன்னரின் மொழிபெயர்ப்புதான் மிகவும் வெற்றிகரமானதாய் இருந்தது. இந்த ஜேம்ஸ் மன்னரின் பதிப்பு வேதாகமம் இன்றும் உலகெங்கும் மில்லியன் கணக்கான மக்களால் பிரியத்துடன் பயன்படுத்தப்படுகிறது.

அடுத்தபடியாக Revised Standard Version புதுப்பிக்கப்பட்ட தரமான பதிப்பு. இது 1952இல் செய்து முடிக்கப்பட்டது. ஆனால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்ட எல்லா வேதாகமங்களை யும் விட அதிகமான சிக்கல்களையும், பிரச்சனைகளையும், முரண்பாடுகளையும் கொண்டது. இது அமெரிக்காவின் தேசிய சபைக்குழுவால் வெளியிடப்பட் டிருந்தது.

1971இல் வெளியிடப்பட்டது இது. “The Living Bible” வேதாகம வசனப்பகுதிகளை அப்படியே மொழிபெயர்க்காமல், சுருக்கத்தை உரைநடையில் எழுதுவது போல் ஆக்கப்பட்டது. இது ஒரு தனிமனிதனால் செய்யப்பட்டது. அவர் பெயர் அறிவர் கென்னத் டெய்லர். அவர் தன்னுடைய பிள்ளைகள் படித்துப் புரிந்து கொள்ளும்படி அந்த வேதாகமத்தை எழுதியிருந்தார்.

1972 இல் The New American Standrad Bible முடித்து வெளியிடப்பட்டது. 1973 இல் புதிய சர்வதேச வேதாகமப் பதிப்பு வெளியானது. பின்னர் பத்து வருடங்களுக்குள் The New King James Version வெளியானது. இதில் சில மொழி மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டது. வேதாகம மொழியாக இருந்த thee, thy இவற்றை you, your என்று மாற்றினர்.

புதிய சர்வதேசப் பதிப்பு என்னும் வேதாகமத்தில் வேதாகம நூல்களை எழுதியவர்களின் நோக்கம் மாறாமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் வார்த்தைகளைச் சரியாகச் சொல்பொருளின்படி மொழிபெயர்க்கப்படவில்லை. இது மிகப்பழைய கையெழுத்துப் பிரதிகளை ஆதாரமாகக் கொண்டது.

17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிடைத்த, வேதாகம நூல்களின் மூலக் கைப்பிரதிகள் நகல்கள் தொகுக்கப்பட்டுத் தேவைப்படுவோருக்கும் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பை TEXTUS RECEPTUS என்னும் அமைப்பு செய்திருந்தது. அதை ஆதாரமாகக் கொண்டுதான் ஜேம்ஸ் மன்னரின் வேதாகமப் பதிப்புகள் மொழிபெயர்க்கப்பட்டிருந்தன.

இத்தனை வேதாகமப் பதிப்புகளின் அவசியம் என்ன? ஏன் மீண்டும் மீண்டும் வேதாகமம் புதுப்பிக்கப்பட்டும் பதிப்பிக்கப்படுகின்றன. வேதாகமத்திலிருந்து வேத வசனங்களைப் பலவீனப்படுத்தும் எண்ணத்துடனோ, வேதாகமம் திரும்பத் திரும்ப புதுப்பித்து மொழிபெயர்க்கப் படவில்லை. ஆனால் சில வேதாகமப் பதிப்புகள் தாராள மனப்பான்மையுடன் தொடங்குகின்றன. மொழிபெயர்ப்பாளர்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வார்த்தைகளைத் தெரிந்தெடுப்பதிலும் தாராள மனப்பான்மையைக் காட்டிவிடுகிறார்கள். முறையான மொழிபெயர்ப்பாளர்களிடம் இந்த முறைக்கு ஒரு எதிர்ப்பு இருக்கிறது.

நாம் பாரபட்சமின்றி நடுநிலை வகிக்கவேண்டும். இந்த வேதாகமப் பதிப்புகள் எல்லாமே நல்ல நோக்கங்களுடன்தான் செய்யப்பட்டன. மொழி பெயர்ப்பாளர்கள் வேதாகமத்திற்கு ஒரு நல்ல சரியான மொழிபெயர்ப்பையே கொடுக்க விரும்பினர். அவர்களுடைய நோக்கமும் குறிக்கோளும் சரியானவைகளாகவே இருந்தன.

(தொடரும்)

மொழியாக்கம்: ஜி.வில்சன்