ஜெபக்குறிப்பு: ஆகஸ்டு 16 சனி

“… என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்” (ஏசா.51:7) என்ற வாக்கைப்போல அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களின் மூலமாக உணர்த்தப்படும் கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடுக்கவும், சகோதரி சாந்தி பொன்னு அவர்களின் நல்ல சுகத்திற்காக, தியானங்களை எழுதும் சகோதர சகோதரிகளுக்காகவும் ஜெபிப்போம்.