ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 21 ஞாயிறு
“கர்த்தரைப் பாடி அவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்” (சங்.105:2) இவ்வாக்கைப்போலவே இந்த மனமகிழ்ச்சியின் நாளைத் தந்த தேவனை ஸ்தோத்திரித்து, கர்த்தர் செய்த அதிசயங்களையெல்லாம் எண்ணி எண்ணி ஆண்டவரை மகிமைப்படுத்துவோம்.