ஜெபக்குறிப்பு: அக்டோபர் 18 ஞாயிறு
“உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக” (2 தெச.2:17) கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் கூடி, கர்த்தரைத் தொழுதுகொள்ள வந்த யாவருடைய இருதயங்களையும் கர்த்தர்தாமே தேற்றி, முடிவு வரையும் ஸ்திரப்படுத்த ஜெபிப்போம்.