ஆசிரியரிடமிருந்து…

(நவம்பர்-டிசம்பர் 2016)

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள வாசகர்களுக்கு,

நம் மீட்பரும் ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

இவ்வருடத்தின் இறுதிவரைக்கும் வழிநடத்தி வந்திருக்கும் அன்பின் தேவனை நாங்கள் துதிக்கிறோம். கடந்த இதழ் வாயிலாக தாங்கள் பெற்ற ஆசீர்வாத அனுபவங்களை எங்களோடு பகிர்ந்துகொண்ட தேவபிள்ளைகளுக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

இவ்வாண்டில் வேதவாசிப்பு அட்டவணைப்படி பரிசுத்த வேதாகமத்தை வாசித்து முடித்தவர்கள் எங்களுக்கு எழுதித் தெரிவியுங்கள். வருகிற புதிய ஆண்டிலே அநேகர் வேதாகமத்தை முறையாக வாசிக்க வாஞ்சிக்கிறோம். “வேத வசனங்களை ஆராய்ந்துபாருங்கள் (யோவான் 5:39) என ஆண்டவராகிய இயேசு நமக்கு கட்டளை கொடுத்துள்ளார். வெறுமனே இந்த தியானங்களை மட்டுமன்றி அவர் கட்டளைப்படி வேத வசனங்களை ஆராய்ந்து கற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.

தங்கள் சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ளாத பங்காளர்களும் சந்தாதாரர்களும் புதுப்பித்துக் கொள்வதற்கு நினைவூட்டுகிறோம்.

நவம்பர் மாதத்தில் சகோதரி ஜெபி பீடில் அவர்கள் மாற்கு சுவிசேஷத்தில் இடம் பெற்றுள்ள இயேசுகிறிஸ்துவின் போதனையிலிருந்தும் சம்பவங்களிலிருந்தும் தியானங்களை தயாரித்து வழங்கியுள்ளார்கள். டிசம்பர் மாத தியானங்களை சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தில் வந்து பிறந்ததின் நோக்கம், தேவதிட்டம், பிதாவின் அன்பு ஆகியவற்றை மையமாக வைத்து எழுதியுள்ளார்கள். இத்தியானங்களின் வாயிலாக வாசிக்கிற ஒவ்வொருவரும் ஆசீர்வாதம் அடைய வேண்டுதல் செய்கிறோம்.

சத்தியவசன விசுவாசபங்காளர்கள், நேயர்கள் சந்தாதாரர்கள் யாவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்