ஜெபக்குறிப்பு: 2018 மார்ச் 30 வெள்ளி

“நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” (2கொரி. 5:21) என்ற வாக்குப்படி சர்வலோக பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகிய அவரை அறிந்துகொள்ளாத ஒவ்வொருவரும் ஆண்டவரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் நாளாக இந்நாளின் ஆராதனை காணப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.