ஜெபக்குறிப்பு: 2018 ஏப்ரல் 14 சனி
“ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்” (சங்.82:3) இவ்வாக்குப்படியே ஆதரவற்ற பிள்ளைகளுக்காகவும், முதியோர்களுக்காகவும் இயங்கிவரும் கிறிஸ்தவ இல்லங்களில் அவர்கள் உண்மையோடும் அன்போடும் பராமரிக்கப்பட, அவர்கள் தேவைகள் சந்திக்கப்பட இவர்களை ஆதரிக்கிற மக்களுக்காகவும் ஜெபிப்போம்.