ஜெபக்குறிப்பு: 2018 மே 24 வியாழன்

“அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்”(மத்.5:45) இவ்வாக்குப்படி யாவர் மீதும் தயையுள்ள கர்த்தர் குடிநீருக்கு கஷ்டப்படும் கிராமங்களிலும் மழையே பெய்யாத மாவட்டங்களிலுள்ள மக்களை நினைத்தருளவும், அந்தந்தப் பருவகால மழைகளைத்தந்து ஆசீர்வதித்திட வேண்டுதல் செய்வோம்.