ஜெபக்குறிப்பு: 2018 ஜூலை 22 ஞாயிறு

“சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள்” (ஏசா.29:19)  கர்த்தரின் நாளிலே சிறுமையானவர்கள் ஒடுக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து அவர்களது அத்தியாவசியத் தேவைகளைச் சந்திக்கிற ஊழியங்களையும் ஊழியர்களையும் கர்த்தர்தாமே அபரிமிதமாக ஆசீர்வதித்து வழிநடத்த ஜெபிப்போம்.