ஜெபக்குறிப்பு: 2018 நவம்பர் 1 வியாழன்
கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி காத்திருப்பேன் (சங். 5:3).
“நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்” (ஏசா.49:23) இவ்வருடத்தின் பதினொராவது மாதத்தைக் காணச் செய்த தேவனை ஸ்தோத்திரிப்போம். கர்த்தருக்குக் காத்திருந்து புதுப் பெலனை பெற்றுக்கொள்ள அவருக்கு நம்மை அர்ப்பணிப்போம்.